இதன் இடையில் மிதுன் கேட்ட கேள்விக்கு மகிமா விடை அடுத்த வாரம் அவர்கள் trustக்கு செல்லும் போது சொன்னாள்.
மகிமா, வருண் இருவரும் வழக்கம் போல் வந்தனர். வருண் யோகா ட்ரைனிங் சென்டர் நோக்கி செல்ல,
மிதுன் மகிமா இருவரும் கணக்கு பார்க்க அமர்ந்தனர். மாதத்தில் ஒரு சண்டே மட்டும் மற்றவர்களை voluntee வொர்க் அனுப்பி விட்டு, மிதுன் மகிமா அந்த மாத கணக்குகளோடு , அடுத்த மாதத்திற்கான tentative schedule போடுவார்கள். அதில் மாற்றங்கள் மட்டும் தேவைபட்டால் செய்து கொள்வார்கள்.
இன்றும் அந்த வேலைகள் முடிக்கும் நேரத்தில் , மிதுன் “மகி .. நான் உன்னிடம் கேட்டதற்கு பதிலே சொல்லவில்லையே ?” என்று வினவ,
இத்தனை நேரம் அதை பற்றி எதுவும் கேட்கதாதால் மிதுன் அதை மறந்து விட்டானோ, அல்லது தன்னிடம் விளையாடினானோ என்று எண்ணி சற்று கலங்கி இருந்த மகி அவன் கேட்ட கேள்வியில் அவனை பார்த்து முறைத்தவள், பின் சற்று நிம்மதி அடைந்தாள்.
அவளின் முறைப்பை பார்த்த மிதுன் “ஹேய்.. என்ன ஆச்சு..? நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா..? என் மேலே எதுவும் கோபமா?”
“நீங்க ஏன் இவ்ளோ நேரம் கழிச்சு கேட்டேங்க இதை..?” என்று கூற.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பூஜா பாண்டியனின் "நானும் அங்கே உன்னோடு" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
இப்போ அவ கேட்டது தப்பு என்கிறாளா, இல்லை ஏன் கேட்கவில்லை என்று கோபபடுகிறாளா என்று புரியாமல் முழித்த மிதுன்
“இல்லை.. வந்தவுடனே கேட்டா, நீ கோவிச்சுட்டு போய்ட்டா என்ன பண்றதுன்னு யோசிச்சு evening ஆ கேட்டேன்..” என,
“இப்போ மட்டும் கோவப்பட மாட்டேனா..?”
“இப்போவும் தெரிஞ்சிக்கலைனா எனக்கு மண்டை வெடிசசுடுமே” என
“அட.. மண்டை வெடிச்சா எப்படி இருக்கும்னு பார்க்கணும் ஆசை.. அதோட மண்டை வெடிக்கும்போது அங்கே உள்ள மூளை இருக்கான்னு டெஸ்ட் பண்ண வேண்டும்.. சீக்கிரம் வெடிக்க வைங்க பார்ப்போம்”
“ஹேய்.. என்ன விளையாடுறியா.. “ என்றவன்,
“ப்ளீஸ் டா.. மகி குட்டி.. என் செல்லமா லே.. சொல்லிடு.. உனக்கு என்னை பிடிச்சு இருக்கா.. ?” என்று காதல் கண்களில் வழிய வினவினான் மிதுன்..
அவனின் பார்வையில் மயங்கிய மகி மெதுவாக “ஹ்ம்ம். எனக்கு உங்கள பிடிச்சு இருக்கு” என்றாள்.
அவளின் முகசிவப்பும், வெட்கமும் போட்டி போட சொன்ன விதத்தில் “ஐ லவ் யூ மகி..” என்று அவள் கைகளில் முத்தமிட்டான் .
இங்கே ஒரு காதல் அரங்கேறி கொண்டு இருக்க, அங்கே வருணோ வர்ஷாவிடம் போட்டு வாங்கி கொண்டு இருந்தான்..
அன்றைய ட்ரைனிங் முடித்து விட்டு கிளம்பும் போது , ட்ரைனிங் ஹால் இல் மேட் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தவர்கள்
“வர்ஷு..டார்லிங் “ என வருண் அழைக்க,
“ஹலோ.. என் பேர் வர்ஷா.. அதோட இந்த டார்லிங் போடற வேலை எல்லாம் வேண்டாம்..”
“நீதானே டா சொன்னே போன வாரம் ?”
“என்ன சொன்னேன்..?”
“அதான்.. நான் உன் பின்னாடி சுத்தற மாதிரி உன் அண்ணா மகி பின்னாடி சுத்தினா என்ன தப்புன்னு கேட்டியே?”
“ஆமா.. என் அண்ணா மகிமாவ விரும்பறாரு .. அதனாலே அவர் லவ் சொன்னப்போ ஏன் முறைசீங்கன்னு கேட்டேன்..”
“அப்போ உங்க அண்ணா தப்பு செய்யலைன்னு ஒதுக்கிற.. அப்படிதானே..”
“ஆமாம்.. “
“அப்போ நான் உன்னை விரும்பறது மட்டும் எப்படி தப்பு ஆகும்?”
இதுவரை எத்தனையோ முறைகளில் வர்ஷாவிடம் indirect ஆகவும், வம்படியாகவும் சொல்லி இருந்தாலும் நேரடியாக சொல்வது இப்போது தான்.. இந்த வார்த்தைகளில் வர்ஷா திரு திரு என முழிக்க , வருண் அவளிடம் வந்து அவள் காதுகளில் ஐ லவ் யு என்றான்.
சற்று திகைத்த வர்ஷா “எனக்கு தெரியல வருண்.. நான் இன்னும் காதல் பத்தி எல்லாம் நினைக்கல.. என் படிப்பு முடிக்கணும்.. அப்புறம் இந்த டிரஸ்ட் மாதிரி இன்னும் நிறைய பண்ணனும்.. அதுதான் .. என்னோட தற்போதைய எண்ணம்..”
“ஐ கேன் understand வர்ஷா. நான் உன்ன disturb பண்ண மாட்டேன்.. ஸ்டில். உங்க வீட்லயோ, இல்லை உனக்கு வேற யாரவது லவ் propose பண்ணினாலோ , அதுக்கு reply பண்ற முன்னாடி, என்னோட லவ் பத்தி consider பண்ணு. ஓகே வா..”
இந்த பதில் வர்ஷாவிற்கு பிடித்து இருந்தது. அதனால் மெல்ல தலையாட்டினாள்.
“ஹேய்.. வர்ஷு.. அதுக்காக உன்கிட்ட வம்பு இழுக்காமல் எல்லாம் இருக்க மாட்டேன். அது வேற .. இது வேற.. ஓகே ..” என்று முடித்தான் வருண்.. இதற்கும் தலையாட்டினாள் வர்ஷா..
எல்லா வண்டியும் ஒரு வழியாக லவ் track ஒட்டிக் கொண்டு இருக்க, அர்ஜுன் சுறா மட்டுமே தனியாக track ஒட்டிக் கொண்டு இருந்தனர்.. ஒருவரை ஒருவர் அறியாமல் ஆனால் இருவரும் ஒரே விஷயத்தை யோசிச்சு கொண்டு இருந்தனர்.. அதை தங்கள் ஆபீசெரிடமும் தெரிவித்தனர்.. ஆனால் அதை அலட்சியபடுதியதால் ஏற்பட்ட விளைவுகள்.. மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
மழை பொழியும்
{kunena_discuss:1031}