"பாட்டி!அர்ஜூன் என் நண்பன்!குரு என் மேனேஜர்!அவன் தான் எல்லாத்தையும் பார்த்துக்கிறான்!!"
"என்னிக்கும் நமக்காக உழைக்கிறவங்க அருமை கடைசியில தான் நமக்கு தெரியும்!சரி...நான் வந்த வேலையை மறந்துட்டேன் பார்!"
"என்னை எழுப்ப தானே வந்த?அதான் எழுப்பிட்டியே!!"
"இல்லை...நான் உன் கல்யாணம் விஷயமா பேச வந்தேன்!"
"சமாதி கட்ட பார்க்குறீயா??என்ன துரோகம் பண்ணேன் உனக்கு?"
"அப்படியே போட்டேன்னா!என்னடா பேச்சு இதெல்லாம்?"
"சரி...டென்ஷன் ஆகாதே!!"
"மித்ரா பற்றி என்ன நினைக்கிற?"
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்..
"லூசு!"
"ஏ...!"
"வேற என்ன சொல்ல சொல்ற?"
"அவளை கல்யாணம் பண்ணிக்கிறீயா?"-அவனுக்கு தூக்கிவாரிப் போட்டது.
"லட்சுமி!"
"சொல்லுடா!"
"எனக்கு அந்த எண்ணம் இருந்திருந்தா,என்னிக்கோ அவளை கல்யாணம் பண்ணி இருந்திருப்பேன்!"
"டேய்!"
"பாட்டி!மித்ரா என்னோட க்ளோஸ் ஃப்ரண்ட் பாட்டி!நான் அவளை டீஸ் பண்ணுவேன்!கிண்டல் பண்ணுவேன்!ஆனா இதுநாள் வரை தவறான கண்ணோட்டத்துல அவளை பார்த்தது இல்லை!"
"ஆனா!"
"நீ மித்ராக்கிட்ட கேட்டாலும் இதே பதில் தான் என் செல்லமும் சொல்லுவா பாரேன்!"
"போடா!அப்போ எப்போ தான் கல்யாணம் பண்ணிப்ப!"
"ஐயா லவ் மேரேஜ் தான்!நீ வேணும்னா உன் பேத்திக்கு ட்ரை பண்ணு!"
"லவ்வா??யாருடா?யார்டா அந்தப் பொண்ணு?"
"இன்னும் கண்டுப்பிடிக்கலை!"
"அடச்சே..!சுத்த தண்டம்!"
"பாட்டி!"
"27 வயசாகுது!இன்னும் ஒரு பொண்ணைக் கூட லவ் பண்ணலை!வெட்கமா இல்லை!"
"நானா பண்ண மாட்றேன்!அமைய மாட்டுது!"
"எப்படி அமையும்?இப்படி தூங்கிட்டே இருந்தா?இங்கே பாரு..!அதிகப்பட்சமா அடுத்த வருட பிறந்தநாள் வரை டைம் தரேன்!அதுக்குள்ள கல்யாணம் பண்ற வேலையை பாரு!இல்லை..."
"என்ன பண்ணுவ?நீயே பார்த்து.வைத்துடுவியா?"
"எனக்கு வேற வேலை இல்லை?சாமியாரா போடான்னு துரத்தி விட்டுவிடுவேன்!ஜாக்கிரதை!"-என்றவர் அவன் அறையை விடுத்து வெளியேறினார்.
"டேய் ராணா!உனக்கு எதிரி வெளியே இல்லடா!ம்...நமக்கானவள் எங்கே இருக்காளோ!எப்படி இருக்காளோ!உயிரோட இருக்காளா?இல்லை தற்கொலை எதாவது பண்ணிட்டாளான்னு தெரியலையே!"-அவனிடம் இருந்து ஏக பெருமூச்சு ஒன்று வெளியானது.
தொடரும்
{kunena_discuss:1104}