“ரெண்டு பேரும் விளையாட்டை நிறுத்தறீங்களா.... பாரதி எதுக்கு எடுத்தாலும் கையை ஓங்கிட்டு கிளம்பறதை நிறுத்து..... அட்லீஸ்ட் பப்ளிக் பிளேஸ்லயானும் அடிக்காம இருக்கப் பாரு... நீ சொல்ற அந்த நாலு பேருக்கு மொதல்ல நல்ல உதாரணமா இரு.... தப்பு நடந்தா உடனே தடி எடுக்கணும்ன்னு நீயே சொல்லிக் கொடுக்காத....”,சந்திரன் சொல்ல சரி என்றும் இல்லாமல், இல்லை என்றும் இல்லாமல் எல்லா சைடும் தலை ஆட்டி வைத்தாள் பாரதி.
“சரி சாரங்கா... நாளைக்கு கேஸ்க்கு பாயிண்ட்ஸ் எல்லாம் எடுத்துட்டியா....”
“எல்லாம் ரெடியா இருக்கு சீனியர்...”
“சீனியர் எனக்கு என்னவோ இந்தக் கேஸ் நாம ஜெய்ப்போம்ன்னு நம்பிக்கையே இல்லை.....”
“உன் வாயில தீயை வைக்க.... எதுக்கு இப்போ இப்படி அச்சான்யமா பேசற.....”
“சும்மா இரு சாரங்கா.... ஏன் பாரதி உனக்கு அப்படித் தோணுது.....”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ராசுவின் "நீ தான் என் சந்தோஷம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
“போன முறை சாட்சி சொல்ல வந்தவனை அந்த எதிர்கட்சி வக்கீல் ரெண்டு வாட்டி போய் பார்த்திருக்கார் சீனியர்.... நான் நேத்து அவங்க வீட்டுக்கு போனபோது அவனோட பாடிலாங்குவேஜ் சரியே இல்லை. நாளைக்கு அனேகமா எனக்கு எதுவுமே தெரியாதுன்னு அடிச்சு விடுவான் பாருங்க....”
“மத்த கேஸ் மாதிரி இந்தக் கேஸை நாம விட முடியாது பாரதி... சின்ன பொண்ணு, பன்னெண்டு வயசுதான் ஆகுது... அதுக்கிட்ட போய் தப்பா நடக்க பார்த்திருக்காங்க....”
“சீனியர் இப்போலாம் பன்னெண்டு வயசெல்லாம் சீனியர் சிட்டிசன்க்கு போய்டுச்சு... லேட்டஸ்ட் டிரெண்ட் ரெண்டு வயசுலேர்ந்து ஆறு வயசுதான்.....”
“இந்த சமூகம் எதை நோக்கிப் போகுதுன்னே தெரியலை... கலாச்சாரம், கட்டுப்பாடுன்னு வாய் கிழிய பேச மட்டும் செய்யறோம்... செயல்ல ஆதி மனிதனை விட மோசமா இருக்கோம்...”
“டென்ஷன் ஆகாதீங்க சீனியர்... நாம பார்த்துக்கலாம்... ஆனா நாளைக்கு அந்த சாட்சிய நம்பி பிரயோஜனம் இல்லை.... நீங்க வேற எதாவது யோசிங்க.. அதுக்குத்தான் நான் இப்போ உங்ககிட்ட இதை சொன்னேன்...”
“அவன் ஒருத்தன்தான் இந்தக் கேஸ்ல eye witness.... அவன் மாத்திப் பேசினான்னா அந்த பையன் ஈஸியா வெளிய வந்துடுவான்.....”
“என்ன பண்ண முடியும் சீனியர்... அந்த சாட்சிக்கு ரெண்டு பசங்க இருக்காங்க... பணத்துல அடிச்சிருப்பாங்க.... நம்ம நாட்டுலதான் பணம் பாதாளம் வரை பாயுமே....”
“பாரதி நீ ஏன் சீனியரை டென்ஷன் கிளப்பற... நம்மால முடிஞ்ச வரை பார்க்கலாம் சீனியர்.... அதுக்கு மேல ஆண்டவன் பார்த்துப்பான்....”,என்று சாரங்கன் கூற அவனைப் பார்த்து மர்மப் புன்னகை புரிந்தாள் பாரதி.
தொடரும்
{kunena_discuss:1100}