'குழந்தை பிறக்காது. உடம்பிலே பிரச்னைன்னு அஸ்வினி சொல்றா. உன்னை நிஜமா லவ் பண்றவனா இருந்தா உடனே உடம்புக்கு என்னமா பிரச்சனை ஒரு வார்த்தையாவது கேட்கணும் இல்லையா. கேக்கலை. அதைப்பத்தி எதுவுமே கேக்கலை. அவனெல்லாம். ஒரு மனுஷன்னு நீ........சுயநலவாதிடி அவன். பக்கா சுயநலவாதி!!!
'அப்போவே எனக்கு தெரியும் அவன் வரமாட்டன்னு!!! எஸ்!!! திட்டம் போட்டுதான் இதை செஞ்சேன்...' ஜன்னலை ஓங்கி குத்தினான் பரத்.
சில நொடி மௌனமே அரசாண்டது அங்கே. பின்னர் மெல்ல திரும்பினான் அவன்.
'துரோகம்தான் கண்ணம்மா இது. நான் உனக்கு தெரிஞ்சே செஞ்ச பெரிய துரோகம். ஆனா மன்னிச்சிடு, சாரி இதெல்லாம் கண்டிப்பா சொல்லவே மாட்டேன். இந்த கல்யாணம் நின்னு போனதிலே எனக்கு சந்தோஷம். பெரிய சந்தோஷம்.. பெரிய பெரிய சந்தோஷம் என்றான் அழுத்தமாக.
வார்த்தைகள் இல்லை அபர்ணாவினிடத்தில்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஜெய்யின் "சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா" - சமூக அக்கறையுள்ள குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
'நான்தான் அன்னைக்கு உனக்கு வாக்கு கொடுத்தேன். உன்னையும் அவனையும் சேர்த்து வெச்சிடறேன்னு.. ஆனா அன்னைக்கு மொட்டை மாடியிலே உன்னை அடிச்சான் கண்ணம்மா அவன். என் கண்முன்னாலே கை நீட்டி அடிச்சான்.. அவன் விரல் உன் கன்னதிலே அப்படியே....என்னாலே தாங்கிக்க முடியலை கண்ணம்மா..' அந்த வலியை அவன் அனுபவித்தது போலவே சொன்னான் பரத்.
'அவள் வலியை தனது வலியாய் பார்க்கும் அவனது அன்பு அவளை மெல்ல இளக்கியது..' மௌனம் மட்டுமே மிச்சம் அவளிடம்.
நீ கார்லே வந்து அழுதே என்கிட்டே அப்போ... அப்போ முடிவு பண்ணேன் கண்ணம்மா இனிமே அவனோட உன்னை அனுப்ப முடியாதுன்னு. ...' அவன் குரல் கொஞ்சம் இறங்கியது.
நீ என் கண்ணம்மாடா உன்னை அவனோட அனுப்பிட்டு அதுக்கு அப்புறம் அவன் உன்னை அடிச்சானோ, அழவெச்சானோ நீ எப்படி இருக்கியோன்னு தினம் தினம் பயந்திட்டு வாழ முடியாதுடா என்னாலே...' இப்போது அவன் கண்களின் ஓரம் கண்ணீர்.'
'நீ என் பொண்ணுடா உன்னை அவனோட அனுப்பி விட்டுட்டு அவன் உன்னை அடிச்சானோ நீ எப்படி இருக்கியோன்னு தினம் தினம் பயந்திட்டு வாழ முடியாதுமா அப்பாவாலே...'
சற்றுமுன் அப்பா சொன்னதுதான் இப்போது நினைவுக்கு வந்தது அபர்ணாவுக்கு. எப்பவுமே அப்பாவுக்கு அவள் செல்ல மகள்தான். அப்பாவின் அந்த அன்புக்கும் இவனது அன்புக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லையோ??? அவரது கண்ணீரும் இவன் கண்ணீரும் ஒன்றே தானோ??? கண்ணீர் இவள் கண்களை முட்டிக்கொண்டு நின்றது
'சொன்னா நீ புரிஞ்சிக்க மாட்டே தெரிஞ்சே கண்ணை கட்டிட்டு கிணத்திலே விழறேன்னு அடம் பிடிப்பே.. அதான் முடிச்சிட்டேன். உனக்கு தெரியாமலே எல்லாத்தையும் முடிச்சிட்டேன்..' அவளை பார்த்து சொல்லிவிட்டு நாற்காலியில் வந்து அமர்ந்துக்கொண்டான் பரத்.
ஒரு நிமிடம் முழுவதுமாக கரைய சிலையாக நின்றுக்கொண்டிருந்தவளின் பக்கம் திரும்பினான் பரத். அவன் மனம் கொஞ்சம் ஆறி இருக்க வேண்டும் போலும்!!!
'முடியலை கண்ணம்மா என்னாலே. உன்னை ஏமாத்திட்டு என்னாலே ஒரு நிமிஷம் கூட நிம்மதியா இருக்க முடியலை. அதுவும் நீ மயக்கம் போட்டு விழுந்ததும்.. அப்படியே... அப்படியே நெஞ்சு வெடிச்சு செத்துடுவேன்னனு தோணிச்சு. அதான் கொட்டிட்டேன் கண்ணம்மா. எல்லாத்தையும் உன்கிட்டே கொட்டிட்டேன். இப்போ மனசு ரொம்ப லேசா ஆயிடுச்சு'. அவன் சொல்ல
இவனும் இவ்வளவுதானா??? அவனால் இப்படி எல்லாம் செய்ய முடியுமா??? அவனால் எனக்கு துரோகம் செய்ய முடியுமா??? என்ற எண்ணங்கள் மனதை விட்டு கரைந்து ஓடின அவளுக்கு.
பெரிய தவறுதான் செய்திருக்கிறான் அவன். அதுவும் தெரிந்தே!!! புரிகிறது அவளுக்கு. அதே நேரத்தில் அவனது இப்போதைய வார்த்தைகள் உணர்வுகள் எதிலுமே பொய் இல்லை என்றே அழுத்தமாக தோன்றுகிறது அவளுக்கு. அந்த தவறின் அடிப்படையில் இருப்பது அவன் அவள் மீது கொண்ட அன்பு மட்டுமே என்றும் புரிகிறது..
'வந்ததும் நீ என்கிட்டே கேட்டே என்னை கல்யாணம் பண்ணிப்பீங்களான்னு. ஆனா உண்மைகள் தெரிஞ்ச அப்புறம் உன்னாலே அப்படி யோசிக்க கூட முடியாதுன்னு எனக்கு தெரியும். விட்டுடலாம். அதை விட்டுடலாம். உனக்கு வேறே ஒரு நல்ல மாப்பிள்ளை கூட பார்க்கலாம். சரியா??? ஆனா .தயவு செய்து என்னை வெறுக்க மட்டும் செய்திடாதே கண்ணம்மா. நீ சந்தோஷமா இரு அது போதும் எனக்கு ' என்றான் தழைந்து போன குரலில்.
'இவளை கட்டிக்கிட்டு நான் என்ன பண்ண??? என சொல்லும் அருண் போன்றவர்கள் இருக்கும் நிலையில் தான் காதலிக்கும் பெண்ணிடமிருந்து எதையுமே எதிர்ப்பார்க்காமல் அவளது மகிழ்ச்சி மட்டுமே லட்சியமென எப்படி இருந்துவிட முடிகிறது இவனால்???'
மெல்ல நடந்து அவன் எதிரில் வந்து அமர்ந்தாள் அபர்ணா. அவள் கண்களை தாண்டி வழிந்தது கண்ணீர்..
'வருத்தப்படாதே இந்த அருண் உன்னை விட்டுட்டு போயிட்டான்னு தயவுசெய்து வருத்தப்படாதே. இனிமே உனக்கு எல்லாம் நல்லதுதான் நடக்கும்.
நான் அதற்கு அழவில்லையடா பைத்தியக்காரா..' சொல்லிக்கொள்ளவில்லை அவள். பார்த்திருந்தாள்!!! அவனையே பார்த்திருந்தாள்!!!!
'இவனது இந்த அன்பு அவளுக்கு இத்தனை நாள் புரியவில்லையா??? புரிந்துதானே இருந்தது. ஆனாலும் ஒப்புக்கொள்ளத்தான் மனமில்லையோ???