அவளுக்கும் தானும் அந்த மாதிரி இருந்தது நினைவுக்கு வந்து மனவருத்தத்தை அதிகரித்தது.
தன்னைக் கண்டுகொள்ளாமல் அவன் செல்வதை சாந்தி பொருட்படுத்தவில்லை. சூரியனைக் கண்ட தாமரை போல் அவள் முகம் மலர்ந்தே இருந்தது.
ஏனோ அவளது காதல் கைகூட வேண்டும் என்று நேசமலர் வேண்டிக்கொண்டாள்.
“மார்னிங் சார்.”
“மார்னிங்.”
தனது அறைக்குள் நுழைந்தான். சற்று நேரத்தில் அவளுக்கு அழைப்பு வந்தது.
“வாங்க நேசமலர்.”
ஆயாசத்துடன் நாற்காலியில் சாய்ந்திருந்தான். முகத்தில் களைப்பு தெரிந்தது. சரியாக தூங்கவில்லை என்று பார்த்த உடனே தெரிந்தது.
அவனது செல்லில் அழைப்பு வந்தது. எடுத்தான்.
“அப்பா!”
மறுமுனையில் அவனது தந்தையின் தழுதழுப்பான
...
This story is now available on Chillzee KiMo.
...
தோன்றியது.
என்ன பிரச்சினைன்னு முழுதாகத் தெரிஞ்சாதான் சரிசெய்ய முடியும்.
டைப்பிஸ்ட் தயக்கத்துடன் அவளைப் பார்க்க வந்தாள்.
“மேடம். என்னை நாளைக்கு பொண்ணு பார்க்க வரப்போறாங்க. லீவு வேணும்.”
“நாளைக்கு எம்.டி சார் ஏதோ முக்கியமான ரிப்போர்ட் தயார் பண்ணனும்னு சொன்னாரே.”