“செல்லக்குட்டி. உங்க பேர் என்ன?”
“வீணா.” என்று மழலையில் மிழற்றியது.
அவளுக்கு ‘நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ.’ என்ற பாரதியின் பாடல் வரிகள் காதில் ஒலித்தது.
இந்தக் குழந்தையை விடுதியில் சேர்க்க இந்த ராதாவுக்கு எப்படி மனம் வந்தது. அங்கே சரியாக சாப்பிடாமலோ இல்லை, உணவு ஒத்துக்கொள்ளாமலோ வயிற்றில் புண் வந்துவிட்டது.
மஞ்சரி பாலில் பனங்கல்கண்டு போட்டு ஆற்றித்தர அதை வீணாவுக்கு புகட்டினாள்.
“மஞ்சு. தேங்காய் இருக்கா.”
“இருக்கே. ஏன்?”
“தேங்காய்ப்பால் எடுத்து அதில் இந்த மெதுவடையை சின்னதாக செஞ்சு ஊற வச்சு வீணாவுக்கு கொடுக்கலாம்னுதான். தேங்காயை எடு.”
“நீதான் எப்படி செய்யனும்னு வரைக்கும் சொல
...
This story is now available on Chillzee KiMo.
...
டினாள் மஞ்சரி.
“தூங்கற குழந்தையைக் கொஞ்சாதே.”
“சரிங்க பாட்டி.” என்று கிண்டல் செய்து அவளிடம் ஒரு மொத்தையும் வாங்கிக்கொண்டு உறங்க முற்பட்டாள்.
அவளால் முடியவில்லை.
அந்தக் குழந்தை எப்படி அவளை ஈர்த்தது? எதனால் அந்தக் குழந்தையை மீண்டும் மீண்டும் முத்தமிட ஆவல் வந்தது?