“நீங்க மட்டும் பிடிச்சிருந்தா உடனே சொல்லி அதுல விடாப்பிடியா நின்னு ஜெயிச்சிடுவீங்க.. ஆனா பொண்ணுங்க நாங்க சொன்னா மட்டும் ஒரு மாதிரியா பார்ப்பீங்க”
“..”
“ எனக்கு நீ முக்கியம் கௌதம்! ரொம்ப ரொம்ப முக்கியம்.. உனக்கு என்னை பார்த்துல இருந்தே நட்புதான் தோணி இருக்கலாம்.. ஆனால் நான் உன்னை பார்த்ததுமே என்னை உன்கிட்ட கொடுத்துட்டேன்.. என் சந்தோஷம், என் கனவு, என் உறவு, என் கோபம்.என் பிடிவாதம்,என் குறைகள் எல்லாமே உன்கிட்ட கொடுக்கனும்னு எப்பவோ முடிவு பண்ணினேன்..”
“..”
“உன்னோடு இருக்குறதும். உன்னை சார்ந்து இருக்குறதும் எனக்கு அடிமைத்தனமாகத் தெரியல.. அது ஒரு விதத்துல அழகியலாகத்தான் தெரிஞ்சது..காரணம் என்ன தெரியுமா?” என்று வினவியவள் அவனது விழிகளோடு விழிகளை பிணைத்து அவளுக்கும் அவனுக்கும் மட்டும் கேட்கும் குரலில்
“நான் உன்னை உயிராக காதலிக்கிறேன்!”என்றாள் சதீரஞ்சனி. சொல்லியிருந்தாள்! ஒரு வழியாய் தன் மனதினை அவனிடம் வெளிப்படுத்தியிருந்தாள்.
“ உடனே நான் உன்னை ஏமாத்திட்டேன்.. நம்ம நட்பை கொச்சைப் படுத்திட்டேன்னு மட்டும் சொல்லிடாத கௌதம்!”
“..”
“ நம்ம நட்புக்காகத்தான் என் காதலை கொன்னு எனக்குள்ளேயே புதைச்சேன்.. எல்லாம் சரியாகிட்ட மாதிரி நடிச்சேன்.. உன் சந்தோஷம், உன் எதிர்ப்பாப்புன்னு இருக்க கத்துக்கிட்டேன்.. உனக்குன்னு ஒரு காதல் வந்தப்பவும் அது நிறைவேறனும்னுதான் வேண்டினேன்.. நீ சந்தோஷமா இருக்குறதை மட்டும்தான் பார்க்கனும்னு நினைச்சேன்.. “
“..”
“ஆனா இதுக்கு பேரும் காதல்தான்னு உணராமக் போயிட்டேன்.. காலத்தினால் காதலும்கடந்து போகும்னு நினைச்சேன்.. ஆனால் காதலோடு நாந்தான் காலத்தை கடந்திருக்கேன்..”
“..”
“எனக்கு நீ வேணும்.. என் நண்பனாகவும் வேணும், என் காதலனகாவும் வேணும்.. மழையில நனைஞ்சா, ஒரு நண்பனாக என்னை நீ திட்டவும் செய்யனும், காதலனாக என்னோடு நீயும் மழையில் நனையனும்.. இருள்னு வந்தால், நீ எனக்கு வெளிச்சமாகவும் இருக்கனும் இறுகிய அணைப்பாகவும் இருக்கனும்..”
“..”
“டேய் மனசை தொட்டு சொல்லு, என்னைவிட யாருடா உன்னை ஆழமா காதலிப்பா? உன் பிடிவாதம், முன்கோபம், கர்வம் இதெல்லாம் புரிஞ்சு அதையும் ரசிக்க, என்னால மட்டும்தான் முடியும்.. உன்னைவிட நான் உன்னை நல்லா பார்த்துப்பேன்..”
“..”
“ஆனால் இதெல்லாம் நடக்குமா தெரியல.. இதை எப்படி ஹேண்டல் பண்ணனும் தெரியல.உனக்கு சிரமம்கொடுக்க வேண்டாம்னு நினைச்சேன்.. உன்னை விட்டு போகனும்னு நினைச்சேன்.. ரொம்ப தூரம் ..போ…”என்று தொடர்ந்து பேச முடியாமல் அவள் தவித்திட அவள் கன்னத்தில் சூட்டை உணர்ந்தாள். கௌதமின் உள்ளங்கையில் இருந்தது அவளின் முகம், அவன் விழிகளிலோ விவரிக்க முடியாத கண்ணீர்துளிகளின் வருகை.
தவிப்பாய் அவளும் கண்கலங்கிட,அது வேண்டாமென மறுப்பது போல தலையை இடதும் வலதும் அசைத்த கௌதம், இமைக்கும் நொடியில் அவளது இதழோடு இதழ் பதித்தான்.
பயணிக்க வேண்டும்! இந்த இதழ் ஒற்றுதலின் மூலம் அவளது ஆழ்மனது வரை ஊடுருவி பயணித்து அவளது கவலைகளை உடைத்து காதலை மட்டும் வருடித் தர வேண்டும் என்ற வேகத்தில் அவளை முத்ததினால் மூழ்கடித்தான். அவர்களது இதழ் ஒற்றுதல் வார்த்தைகளுக்கு மாறும்முன் முக்கியமான இன்னொரு ஜோடியை பார்ப்போம் வாங்க.
சாரதாவின் அறையில் படுத்திருந்தாள் நந்திதா. சிலவாரங்களாய் மாமியாருடன் படுத்துக்கொள்ளபழகியவள் அன்றும் அவரோடு படுத்துக் கொண்டாள். விஷ்வானிகா,மருத்துவமனையில் இருக்க,அந்த தாயின் மனம் எவ்வளவு பாடுப்படும் என்று அவளால் உணர முடிந்தது. ஏதோ சிறுப்பிள்ளைக்கு தட்டி கொடுப்பது போல, சாரதாவுகு தட்டி கொடுத்து அவர் உறங்கும்வரை கார்த்திருந்தாள் அவள்.
சாரதாவும் அவளை தடுக்கவில்லை.அந்த துன்பத்திலும்கூட தன் மருமகளை எண்ணி பெருமிதம் தான் கொண்டார் அவர். “இந்த பொண்ணு எங்க குடும்பத்துக்கு கிடைச்சது எப்பேர்பட்ட வரம் செந்தில்நாதா? இதே மாதிரி என் பொண்ணும் ஒரு வீட்டில் விளக்கேத்துவாளா?” என்று அவர் முருகனிடம்கேட்க,
“வருண் இருக்கபயமேன்?”என்று சிரித்தான் வேலவன்.
சாரதா நன்றாக உறங்கிவிட, நந்திதாவிற்கு உறக்கம் போனது. அபிநந்தன் என்ன செய்து கொண்டிருப்பான்? உறங்கியிருப்பானா? அல்லது சோகத்தில் உழன்று கொண்டிருப்பானா?