அவன் என்ன குழந்தையா? என்று ஒரு மனம் கேள்வி கேட்டிட, “ஆமா என் அபி எனக்கு குழந்தை தான்”என்று உரைத்தாள் அவள். அடங்கவில்லை அவளது காதல் மனம். சட்டென எழுந்து அவர்களது அறைக்குச் சென்றாள். வேணுகோபாலன் அன்று அருண் தாத்தாவுடம் உறங்க சென்றதால் அபி தனித்திருந்தான். அவள் யூகித்தது போலவே விழித்திருந்தான். கண்களில் ஈரம்..
நந்திதா கதவை திறந்து கொண்டு எட்டி பார்க்கவும் கண்ணீரை கூட துடைக்காமல் அவளிடம் தஞ்சம் புகத்தான் விரும்பியது அவன் மனம். கிட்டத்தட்ட வாசலுக்கு ஓடி வந்தான். அவளும் பின் வாங்கவில்லை. அறையின் கதவை சாத்திவிட்டு அவனை நோக்கி வந்தாள்.
“என்னம்மா? தூங்கலையா?”என்றான். அத்தனை கனிவு அவனிடத்தில். அலைப்பாய்ந்தன அவன் விழிகள். ரொம்பவும் பயந்திருக்கிறான். சோகத்தில் இருக்கிறான்.. புரிந்து கொள்ள முடிகிறது அவளால்.
“ஏதாச்சும் வேண்டுமாடா”மீண்டும் அவன் கேட்க, ஆமென தலையசைக்கிறாள் அவன் மனைவி.
“என்ன வேணும்டா?” என்று அவன் கேட்க அவனது விழிநீரை நெருங்கி துடைத்து விட்டாள் நந்திதா. அவன் கன்னங்களை வருடிய கரங்கள் அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டன. அவன் பின் கழுத்தில் கரங்களை மாலையாக்கியவள் அவனை இழுக்க, அவள் உயரத்திற்கு அவன் லேசாய் குனியவும்,
“நீ வேணும் அபி..நீ மட்டும் தான் வேணும்” என்று ஒருமையில், காதலாய் தாபமாய் அவன் இதழில் இதழ் சேர்த்தாள் நந்திதா.அவளுக்கு தெரியும் அவனுக்கு அமைதி வேண்டுமென. அந்த அமைதி இப்போதைக்கு வார்த்தைகளால் வந்து நிறைவு தந்திடாது. அதான் தனது கோபம், சவால், பனித்திரை அனைத்தையும் உடைத்துக் கொண்டு அவனுள் கரைந்து அவன் சோகத்தையும் கரைய வைத்தாள். இந்தமுறை எந்தவொரு குற்ற உணர்வுமின்றி “இவள் என் மனைவி!”என்று உரிமையில் அவளை ஸ்பரிசிக்க ஆரம்பித்தன் அபிநந்தன். அவளே எதிர்ப்பாராத இனிய தருணத்தில்,
“ ஐ லவ் யூ சோ மச் நிதூ” என்று கூறியிருந்தான் அவன்!
குழலின் அடுத்த கீதத்தில் இணைவோம்
{kunena_discuss:883}