“இல்லம்மா. சாப்பிடக்கூட மனசு வரலை. இந்தப் பிள்ளைங்க சாப்பிட அடம்பிடிக்கிறப்ப எனக்கு எப்படிம்மா சாப்பாடு இறங்கும்?”
“அப்ப ரஞ்சன் சாரும் சாப்பிடலையா?”
தன்னை மாதிரியே மகனது பெயர் சுருக்கத்தை அழைக்கும் அவளைப் பார்த்து மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார்.
அவனை ஒரு முதலாளியாக மட்டும் பார்த்திருந்தால் இப்படி அழைக்கத் தோன்றுமா?
அவருக்குள் என்னென்னவோ யோசனைகள்.
அவள் பதிலுக்காக காத்திருப்பது தெரிந்து ‘இல்லையென’ தலையசைத்தார்.
“என்ன சாப்பாடு செஞ்சிருக்கார் சமையல்கார அண்ணன்.”
“தெரியலையேம்மா.”
“என்ன சார் இப்படி இருக்கீங்க? பெரிய மனிதர்கள் பசியைத் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் சின்ன பிள்ளைகள் எப்படி தாங்குவார்கள்? நான் போ
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சுட்டு வந்திருக்கலாம்.”
“ரொம்ப அலட்டிக்காம வா. நான் அங்கிளுக்கு காஃபி கொடுத்துட்டு வர்றேன்.”
அவள் சென்று நீட்டியதும் வாங்கிக்கொண்டார்.
அவள் சமையல் அறைக்குச் சென்றாள்.
“அண்ணா! நாம சாப்பிட எது வேண்டுமானாலும் செய்ங்க. நான் பிள்ளைகளுக்கு பருப்பு சாதம் செய்யறேன்.”