“சீக்கிரம் ரஞ்சன் சாரிடம் சொல்லுங்கள் அங்கிள். அவர் ஒரு திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கு தாய்ப்பாசம் கிடைக்கும்.”
“அதுதானம்மா நானும் யோசிக்கிறேன். இத்தனை நாட்கள் வாழ்வில் முன்னேறிய பிறகுதான் திருமணம் பற்றி யோசிக்கலாம் என்று தள்ளிப்போட்டிருந்தான். இப்போதைக்கு நீ சொல்வதுதான் சரியென்று படுகிறது.”
அவளை யோசனையுடன் பார்த்துக்கொண்டே பேசினார்.
பிள்ளைகள் சாப்பிட்டு பிறகு விளையாடி களைப்பில் உறங்கியிருக்க கண்ணம்மாவும் அவளுடன் வந்ததால் அனைத்தையும் கேட்டிருந்தாள்.
“நீ எப்படிம்மா திடீர்னு? உன்னை வந்து பார்க்க சொல்லியிருந்தால் ரஞ்சன் என்னிடம் சொல்லியிருப்பானே?”
“அவரிடம் நான் சொல்லவே இல்லை அங்கிள். இத்தனை திறமை உள்ளவர் நேத்து நீங்க போன
...
This story is now available on Chillzee KiMo.
...
ைப் பார்த்து கண்களை சிமிட்டினான்.
‘என்ன? எப்பப்பாரு இளிக்க வேண்டியிருக்கு? இவனால் சிரிக்காமலே இருக்க முடியாதா?’
என்று கோபத்தில் அவள் குமுறுவாள்.
இப்போது நினைத்துப்பார்த்தால் அவள் கோபப்பட்டது எல்லாம் அவன் அவளோடு சிரித்துப் பேசிய தருணங்கள் அல்ல என்று வெட்டவெளிச்சமாகிறது.