(Reading time: 24 - 47 minutes)

ரிம்மா.”

அவள் பருப்புடன் உருளைக்கிழங்கையும் வேக வைத்தாள்.

அவை வெந்ததும் பருப்பு சாதம் செய்து உருளைக்கிழங்கை வறுத்தாள். கூடவே வடகத்தையும் பொரித்தாள்.

அவற்றை கையோடு எடுத்துக்கொண்டு குழந்தைகளிடம் சென்றவள் அவர்களிடம் கதையளந்துகொண்டே ஊட்டிவிட்டாள். அவர்களுக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது? எல்லாவற்றையும் பேச்சோடு பேச்சாக கேட்டுக்கொண்டாள்.

அவள் சாப்பிடக்கூப்பிடும்போது தாமோதரன் சந்தோசமாகவே வந்தார்.

“ரொம்ப சந்தோசம்மா. உனக்குதான் நன்றி சொல்லனும்.”

“எதுக்கு அங்கிள்?”

“என் பேரப்பிள்ளைங்க வந்ததிலிருந்து சரியாவே சாப்பிடலை. எப்பப்பாரு அவங்க பெத்தவங்களை நினைச்சு ஒரே அழுகை.”

“எப்படி அங்கிள் நினைக்காம இருக்க ம

...
This story is now available on Chillzee KiMo.
...

சமலரின் மனம் வருந்தியது.

திருமணமாகி புகுந்த வீட்டிற்கு சென்ற பிறகு ஏற்பட்ட தாயின் பிரிவையே அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இந்த பிஞ்சு உள்ளங்கள் அந்தப் பிரிவை ஏற்கும் முன் சொத்துக்காக சொந்தங்கள் அவர்களைப் பிரித்த விதம் வேதனையை அழுத்தியது.

கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.