போனில் யாரிடமாவது சிரித்துப்பேசும்போதோ, மற்ற பெண்களுடன் பேசும்போதோ, அதுவும் தனது சகோதரிகளிடம் பேசும்போதுகூட அவளுக்குள் கோபம் கொப்பளிக்கும்.
இப்போதுதான் அதற்கு காரணம் பொறாமை என்று தெரிகிறது. அப்போது அவன் மேல் இருந்த கோபம் அதை எல்லாம் மறைத்திருந்தது.
“அக்கா!” கண்ணம்மா அவளை உலுக்கினாள்.
அவள் சுயநினைவுக்கு வந்தாள்.
நேசமலரின் மனதை எதுவோ குடைவது அவளுக்குப் புரிந்தது.
சமாதானப்படுத்த என்று வந்தவள் தானே துக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள்.
“என்ன கண்ணம்மா?”
தன்னைத் தேற்றிக்கொண்டவளாய் கேட்டாள்.
“இப்ப எதுக்கு இங்கே வந்தோம்? அதைப் பார்ப்பியா? கனவுலகில் மூழ்கிட்டே?”
கிண்டலாக மொழிந்தாள்.
“சாரி கண்ணம்மா. வா
...
This story is now available on Chillzee KiMo.
...
நல்லதை நினைச்சுதானே செஞ்சீங்க மலர். அங்கேயும் முதல்ல நீங்க வரலைன்னதும் கோபம் வந்தது. ஆனால் சாந்திக்கிட்ட நீங்க எல்லாம் தயார் செஞ்சு கொடுத்துட்டு வந்ததால் எந்தப் பிரச்சினையும் இல்லை.”
“இது போல சிரிச்ச மாதிரியே இருங்க சார். குழந்தைங்க முன்னாடி உங்க சோகத்தைக் காட்டிக்கிட்டு அலையாதீங்க.”