(Reading time: 13 - 26 minutes)

ஹ்ம்ம்… சாப்பிடு கலைம்மா…” என்றவன் தாய்க்கு ஊட்டிவிட, அவனின் மடியில் அமர்ந்திருந்த நைனி அதை அப்படியே பார்த்துக்கொண்டிருந்தாள் அமைதியாக…

மகனின் கையால் தந்த விள்ளலை மன நிறைவுடன் வாங்கிக் கொண்டவர், மகனுக்கும் ஊட்ட, அவனும் அதை வாங்கிக்கொண்டான் புன்னகையுடனே…

அடுத்த விள்ளலை எடுத்து அவன் தன் மகளிடம் நீட்ட, அவளோ உடனேயே அதனை வாங்கிக்கொண்டாள் மறுக்காமல்…

உண்ட அடுத்த நொடியே, தன் பிஞ்சுக்கைகளால் சிறு விள்ளலை எடுத்து அவள் அவனிடம் நீட்ட, அவனும் அதை வாங்கிக்கொண்டான்…

“ஆக மொத்தம் இந்த வீட்டுல எனக்கு ஊட்டுறதுக்கும் ஆள் இல்லை… நான் ஊட்டுறதுக்கும் ஆள் இல்லை…” என ராஜேஷ்வரன் சொன்னதும், கலைவாணியும், பிரசனும் சிரிக்க,

நைனியோ, “தாத்தா… டோண்ட் வொரி… நான் ஊட்டி விடுறேன்…” என அவருக்கு ஊட்ட, அவரும் அதனை வாங்கிக்கொண்டு, பேத்தியை தூக்கி கொஞ்சினார்…

“பரவாயில்லை… என் பேத்தியாவது என் பக்கம் இருக்குறாளே… அது போதும்…” என்றபடி அவர் தன் மனைவியைப் பார்க்க, அவரோ முறைத்தார்…

“என்ன முறைக்குற?...” என ராஜேஷ்வரின் பார்வையே கேட்டிட,

“பேசாம சாப்பிடுங்க சொல்லிட்டேன்…” என்றார் அவர் பல்லைக்கடித்துக்கொண்டு…

“பாட்டி… நீ ஏன் இப்போ தாத்தாவை முறைக்குற?... அவர் பாவம்ல… நான் என் பிரசனுக்கு ஊட்டிவிட்ட மாதிரி நீ தாத்தாவ தான கவனிச்சிருக்கணும்… நீ ஏன் என் பிரசனுக்கு ஊட்டிவிட்ட?...”

அவள் சண்டைக்கு தயாராக ஆரம்பிக்க,

“அவ என் பையண்டி… நான் யாரைக் கேட்டு ஊட்டணும்…?...” என பதிலுக்கு மல்லுக்கு நிற்க தயாரானார் கலைவாணி…

“யாரைக் கேட்கணுமா?... என்னைக் கேட்கணும்… அப்பவே சொன்னேன் தான… ஹீ இஸ் மை பிரசன்…”

“என்னமோ நீயே முன்னாடி நின்னு பேர் வச்ச மாதிரி, மை பிரசன் நு பேர் சொல்லி கூப்பிடுற?...”

“ஆமா… அப்படித்தான் வச்சிக்கோ… இப்போ அதுக்கென்ன?...”

“அதுக்கென்னவா?... அவன் எனக்கு புள்ளைடி…”

“அது அப்போ… இப்போ ஹீ இஸ் மை டாடி…. மை டார்லிங்க்… அப்படித்தானப்பா?...”

அவள் உரிமையோடு சொல்லிவிட்டு, அவனிடம் கேட்க, அவனும் ஆமா என்றபடி தலையாட்டிவிட்டு, மகளுக்கு ஊட்டிவிட்டான்…

“என்னடி டார்லிங்க்… அவ என் புள்ளை… முதல்ல எனக்குத்தான் எல்லா உரிமையும்… அதுக்கு அப்புறம் தான் உனக்கு….”

அவரும் தன் உரிமையை கோடிட்டு சொல்லிவிட்டு, மகனைப் பார்க்க, ஆமா என்றபடி தலையாட்டியவன், அவருக்கும் ஊட்டிவிட, அவரும் அதை வாங்கிக்கொண்டார்…

நடப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ராஜேஷ்வருக்கோ சிரிப்பு ஒருபுறம் வர, மறுபுறமோ, தனக்காக சாப்பிடாமல் இருந்த இரு ஜீவன் களுக்கும் மாறி மாறி அவன் ஊட்டிவிடுவது கண்ணில் பட, மனம் நிறைந்தது அவருக்கு…

இருவரும் மாறி மாறி சண்டைக்கு போக, அவனும் அதற்கேற்ப இருவருக்கும் தலையும் ஆட்டிவிட்டு, மாற்றி மாற்றி ஊட்டியும் விடுவதைப் பார்க்கையில், அந்த இடமே அழகாய் தெரிந்தது அவருக்கு…

அன்பான குடும்பத்தில், பாசமும், நேசமும் இருந்தால், அது எப்படி அழகாகும் என்பதை கண் கூட கண்டார் அவர்…

“ஏண்டா நான் இங்க ஒருத்தி கத்திக்கிட்டே இருக்குறேன்… நீ என்னடான்னா பேசாம இருக்குற?...”

கலைவாணி மகனிடம் கோபமாக கேட்க,

“ஹேய்… கலைவாணி… என்ன?... என் பிரசனை மிரட்டுற?...”

நைனியோ வரிந்து கட்டிக்கொண்டு வந்தாள் அவரிடம்…

“வேண்டாம்டி… சும்மா இரு… அப்புறம் சூடுதான் வைப்பேன்…”

“எங்க வை பார்ப்போம்… நீ வைக்குற வரை என் கை என்ன சும்மா இருக்குமா?...”

அவள் தன் விழிகளை உருட்டி மிரட்டியபடி கேட்க, கலகலவென்று சிரித்தனர் பிரசனும், ராஜேஷ்வரனும்…

“எதுக்கு இப்போ அப்பாவும் மகனும் சேர்ந்து சிரிக்குறீங்க?...”

கலைவாணி கணவரிடத்தில் காட்டமாக கேட்க,

“பின்ன சின்னப்பிள்ளைகிட்ட போய் சரிக்கு சரி மல்லுக்கு நின்னா, இப்படித்தான் உனக்கு நோஸ்கட் கிடைக்கும்… அப்புறம் என் நைனி குட்டிகிட்ட அடிவாங்கி இப்படித்தான் மூக்கு உடைஞ்சு போகும்… அப்படித்தான நைனி குட்டி….?....”

ராஜேஷ்வரன் குனிந்து பேத்தியிடம் கேட்க, “ரொம்ப கரெக்ட் தாத்தா…” என்றாள் அவருக்கு ஹைஃபைவ் கொடுத்துக்கொண்டே…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.