(Reading time: 13 - 26 minutes)

வளிடம் டோக்கன் கொடுத்து, பணம் வாங்க வந்திருந்த பெரியவர், அவளைப் பார்க்க, அவளோ டோக்கனை வாங்கிக்கொண்டு பணம் கொடுப்பதற்குள் விக்கல் வந்து கொண்டே இருந்தது அவளுக்கு…

விக்கலை பொருட்படுத்தாமல் அவள் பணத்தை எடுத்து கொடுத்ததும், அதை வாங்கிக்கொண்டவர்,

“கொஞ்சம் தண்ணீர் குடிம்மா… விக்கல் நின்னுடும்…” என்றார்…

அவளும் லேசாய் சிரித்துவிட்டு தண்ணீரினை எடுக்க செல்ல எழுந்து கொண்ட போது, அவளருகே வந்து தண்ணீரை நீட்டினாள் ரித்தி…

அதை வாங்கி குடித்தவள், “தேங்க்ஸ்…..” என கூறிமுடிக்க, மீண்டும் விக்கல் வந்து குடிகொண்டது அவளிடத்தில்…

அதைப் பார்த்த பெரியவர், “உன் வீட்டுக்காரர் உன்னை நினைக்குறார் போலம்மா…” என கூறிவிட்டு அகல

சட்டென நிமிர்ந்தாள் அவள் கண்களில் நீருடன்…

ரித்தி அவளருகில் இருக்க, உதடு கடித்து தன் உணர்வுகளை அடக்கியவள்,

தன் கழுத்தில் இருந்த மெல்லிய செயினில் கை வைத்து இறுக்கினாள்…

பின், “நீ கொஞ்ச நேரம் பார்த்துக்கோ…” என ரித்தியிடம் திக்கித் திணறி கூறிவிட்டு, வேகமாக அங்கிருந்து அகல,

“சகோ… நீங்க வந்தா தான் இதுக்கெல்லாம் முடிவு… சீக்கிரம் வாங்க சகோ… இனியும் வெயிட் பண்ணுறதுல அர்த்தமே இல்லை…” என்றாள் ரித்தியும் சந்தா செல்லும் திசையையேப் பார்த்தபடி…

“பார்க்குறேண்டி… நீ எத்தனை நாள் ஓடுறன்னு… ஒருநாள் இல்ல ஒருநாள் என் சகோக்கு நீ பதில் சொல்லிதாண்டி ஆகணும்… அன்னைக்கு எப்படி ஓடுறன்னு நானும் பார்க்குறேன்…” என ரித்தி அழுத்தமாக உரைத்துவிட்டு, அடுத்த டோக்கனுக்கான எண்ணை ஒலிக்க விட்டாள்…

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்… எப்படி இருக்கு இந்த வீக் அப்டேட்?...

படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்…

சந்தா-பிரசன் இவர்களுக்கிடையே இருக்கும் உறவு என்ன?... யூகித்துவிட்டீர்களா?... ஹ்ம்ம்…

மீண்டும் அடுத்த வாரம் பூக்கும் புது எழில் வானில் சந்திக்கலாம்…

எழில் பூக்கும்...!

Episode # 03

Episode # 05

{kunena_discuss:1122}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.