(Reading time: 19 - 38 minutes)

தைப் பார்க்க பார்க்க அந்தப் பையன் எதிரில் வந்தால் அவனைக் கொல்லும் ஆத்திரம் வந்தது பாரதிக்கு..... மேலும் அவனுடைய மெயில்களைக் குடைய இந்தக் காணொளிகளை அவன் சில நபர்களுக்கு அனுப்பி இருப்பது தெரிய, அதிலிருந்த பெயர்கள் அந்த டைரியில் இருந்த பெயர்களுடன் ஒத்துப் போக டைரியிலிருந்த எண்களைப் பார்க்க  நிறைய எண்கள் வெளிநாட்டு எண்களாக இருந்தது...  பாரதிக்கு தோண்டத் தோண்ட புதையல் கிடைத்த மகிழ்ச்சி.... அவளின் ஒரே ஆச்சர்யம் என்னவென்றால் எப்படி இத்தனை விஷயமும் போலீஸ் கண்ணில் மாட்டாமல் இருந்தது என்பதுதான்.... தன்னுடன் கொண்டுவந்த பென்டிரைவில் அத்தனையும் சேமித்து கணினியை அணைத்தாள்....

அடுத்ததாக பீரோ கண்ணில் பட தன்னிடமிருந்த பின்னின் உதவியால் அதைத் திறந்து உள்ளிருந்தவற்றை ஆராய கையில் சிக்கியது அவனின் வங்கிக் கணக்குப் புத்தகம்... அதில் கடந்த சில மாதங்களாக கணிசமான தொகை பிற வங்கிக் கணக்குகளில் இருந்து பற்று வரவாக செய்யப் பட்டிருப்பது தெரிய பாரதி தொகையைப் பார்த்து அசந்து போய்விட்டாள்... கிட்டத்தட்ட ஏழு லட்ச ரூபாய் இந்த எட்டு மாதத்தில் சம்பாதித்து இருந்தான்.... இப்பொழுதுதான் இளங்கலை முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவனுக்கு கையில் இத்தனைப் பணம் கிடைக்கிறது என்றால் எந்த மோசமான செயலுக்கும் போகத்தானே செய்வான்.... அந்த வங்கிக் கணக்கு புத்தகத்தையும் தன்னிடமிருந்த கைப்பேசியில் புகைப்படம் எடுத்து அதை எடுத்த இடத்திலேயே வைத்து மூடினாள்.....  தான் சேகரித்த அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்த வழியே இறங்கி தன் வீட்டை நோக்கி சென்றாள் பாரதி.

ங்கு நடிகனின் வீட்டின் உள் அந்த நடிகை நுழையும்வரை காத்துக்கொண்டிருந்த சாரங்கன், அவள் உள் நுழையவும் அங்கிருந்த வெண்டிலேட்டர் வழியாக குளியலறையினுள்ளே குதித்தான்...  குளியலறைக் கதவைத் திறந்து அங்கிருந்த அறையின் வழியாக வெளியில் வந்து மாடிப்படியின் அருகில் நின்றான்... அங்கிருந்து பார்க்க அவர்கள் இருவரும் உள்நுழைவது தெரிந்தது.... நடிகர் அங்கிருந்த ஸோஃபாவில்  அவளை உட்கார சொல்ல, அந்த நேரத்தை வீணாக்காது சாரங்கன் தன் பேனாக்காமராவை அங்கிருந்த பூத்தொட்டியின் காம்பில் வைத்துவிட்டு நடிகரின் அறையை ஆராய சென்றான்....

அவன் அரைமணிநேரம் தலை கீழாகத் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை.... கணினியை ஆராய்ந்து நேரத்தை வீணாக்காமல் அலமாரியில் கிடைத்த ஒன்றிரண்டு கோப்புகளின் பக்கங்களை மட்டும் தன்  கைப்பேசியில் ஸ்கேன் செய்துகொண்டான்.....

 வெளியில் வந்து அவர்கள் பேசி முடித்து விட்டார்களா என்று பார்க்க, நடிகனும் அந்த துணை நடிகையும் மேலே ஏறி வந்து கொண்டிருந்தார்கள்....  நடிகன் முன்னால் வர அவனின் பின்னே அந்த நடிகை தன் கண்களைத் துடைத்தபடியே வந்துகொண்டிருந்தாள்.... இருவரும் மேலே வரும்முன் அங்கிருந்த பெரிய தூணின் பின்னால் சென்று மறைந்தான் சாரங்கன்.... சாரங்கன் குதித்த அறையினுள் இருவரும் செல்ல, அந்த நடிகன் அறையின்  கதவை சாத்தினான்... சாரங்கன் அந்தப் பேனாவை செடியின் மறைவிலிருந்து எடுத்து கதவின் இடைவெளியில் உள்ளே நடப்பதை ஒளிப்பதிவு செய்வதற்கு ஏற்றாற்போல் வைத்தான்....

எப்படியும் உள்ளே சென்ற இருவரும் அடுத்த ஒரு மணிநேரத்திற்கு வெளியில் வருவதற்கு சாத்தியம் இல்லை என்பதால் அவன் நிதானமாக தன் தேடலைத் தொடர்ந்தான்.... நடிகனைத் தவிர அந்த வீட்டில் ஒருவரும் இருப்பதாக  அவனுக்குத் தெரியவில்லை... அவனின் மனைவி, குழந்தைகள் திருப்பதி சென்றிருப்பது சாரங்கனுக்குத் தெரியும்... நடிகனின் கடைசி படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதற்காக கடவுளுக்கு நன்றி சொல்ல அவன் மனைவி குடும்பத்துடன் அங்கே சென்றிருக்கிறாள் என்று முந்தைய நாள் செய்தித்தாளில் பார்த்திருந்தான் .... அது எப்படி ஒரு வேலைக்காரர்கள் கூட இல்லாமல், ஒரு வேளை இன்று இந்த நடிகையை வர சொல்லி இருப்பதாலேயே எல்லாரையும் அனுப்பி இருப்பானோ என்று யோசித்தபடியே தன் தேடலைத் தொடர்ந்தான்.... மேலே இருந்த மற்ற நான்கு அறைகளும் சாதாரணமாகவே இருந்தது.... கீழே இருந்த அறைகளும் அப்படியே...  சாரங்கனுக்கு வெறுப்பாக இருந்தது... கிட்டத்தட்ட ஒன்றரை  மணி நேரமாகத் தேடியும் அவனுக்கு ஒரு பொருளும் கிடைக்கவில்லை....

கடைசி அறையை ஆராய்ந்து முடித்த சாரங்கன் ,சரி இனி மேலே சென்று பேனாவை எடுத்துக்கொண்டு செல்லலாம் என்று நினைத்து திரும்பும்போது அங்கிருந்த பூஜை அலமாரி மிக வித்தியாசமாகத் தோன்றியது.... என்னதான் விலை உயர்ந்த பொருட்கள் இருந்தாலும் பொதுவாக யாரும் சுவாமி அறைக்கு பூட்டு போட மாட்டார்கள்.... கடைசியாக சாரங்கன் நுழைந்த அறைதான் பூஜை அறையாக   இருந்தது.... அந்த அறையே வெளியிலிருந்து பூட்டப்பட்டிருந்தது... அதுவும் தவிர  கடவுள் படங்கள் வைக்க என்று தனியாக அலமாரி வடிவில் செய்யப்பட்டிருந்த மாடம் வித்தியாசமான முறையில் எண்கள் கொண்ட பூட்டு அமைப்பாக இருந்தது.... சாரங்கன் அந்த நடிகனின் பிறந்த தேதி, முதல் படம் வெளிவந்த நாள், அவனின் கல்யாண நாள் என்று விதவிதமான காம்பினேஷன்கள் போட்டு கடைசியாக ஏதோ ஒன்றில் அது திறந்தது....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.