(Reading time: 19 - 38 minutes)

ன்ன சாரங்கா... பேச்சு எல்லாம் ஒரு மாதிரி இருக்கு.....”

“அச்சோ மேடம் நீங்க இங்கதான் இருக்கீங்களா.... ஒண்ணும் இல்லை மேடம் சார் எப்படி இருக்கார்ன்னு விசாரிச்சுட்டு இருந்தேன் அவ்வளவுதான்.... உங்களை மாதிரி மகாலக்ஷ்மி கூட இருக்கும்போது அவருக்கு என்ன குறை இருக்கப் போகுது”,ஒரே அடியாக அந்தர் பல்டி அடித்தான் சாரங்கன்....

“சரி சரி ரொம்ப வழியாத... உள்ள வந்து உக்காருங்க... உங்களுக்கு காப்பி எடுத்துட்டு வரேன்....”,தேவி உள் செல்ல சந்திரன் மதியின் வீட்டினுள் நுழைந்தார்.

“என்னடா பண்ணித் தொலைச்சீங்க ரெண்டு பேரும்..... இப்படி காலங்கார்த்தால மதி வீட்டுக்கு வந்து நிக்கறீங்க...”

“சீனியர் இது அநியாயம்.... எப்போ பார்த்தாலும் எங்களை அர்ரெஸ்டான அக்யூஸ்ட் மாதிரியே கேள்வி கேக்கறீங்க.... நாங்க ஒரு ராத்திரில என்ன எல்லாம் கண்டு பிடிச்சு இருக்கோம்ன்னு கேட்டீங்க அப்படியே ஆடிப் போய்டுவீங்க.....”

“நீங்க ரெண்டு பேரும் என்னிக்கு எனக்கு ஜூனியரா சேர்ந்தீங்களோ அன்னிலேர்ந்தே ஆடிப் போய்தான் இருக்கேன் .... சரி விஷயத்தை சொல்லுங்க....”

“சந்திரன் வாங்க நாம ஆபீஸ் ரூம்க்கு போய் பேசலாம்......”,மதி அனைவரையும் அழைத்துக்கொண்டு அவனின் அலுவல் அறைக்கு சென்றான்.... தேவி வந்து அனைவருக்கும் காப்பியை கொடுத்துவிட்டு அவர்களுடன் அமர்ந்தாள்...

சாரங்கனும், பாரதியும் தங்களுக்கு கிடைத்த அனைத்து விவரங்களையும் அவர்களிடம் காண்பிக்க அங்கிருந்த அனைவரும் அதைப் பார்த்து ஆடிப்போய்விட்டார்கள்.

சாரங்கன் பதிவு செய்து கொண்டு வந்த காணொளியை காண, அதில் அந்த நடிகர் நரேஷ் துணை நடிகையை தன் அடுத்த படத்தில் நடிக்க வைப்பதற்கு விலையாக அவனுடன் அந்த இரவைக் கழிக்க அழைப்பது பதிவாகி இருந்தது... அதில் அந்த நடிகை எத்தனையோ மறுத்துப் பேசியும் அவன் ஒத்துக்கொள்ளவில்லை... மாறாக அவளிற்கு வரும் சிறிய வேடத்தையும் எப்படி தன்னால் வராமல் செய்ய முடியும் என்று மிரட்டும்  விதமாக பேசியது பதிவாகி இருந்தது.... அவர்கள் அறைக்குள் சென்றும் அந்தப் பெண்ணை அவன் மிரட்டி தன் வசம் இழுப்பது வரை பார்த்தவர்கள் கண்ணியம் கருதி அதன் பிறகு பார்க்காது விட்டார்கள்....

“ச்சே இவன்லாம் ஒரு பெரிய மனுஷன்.... இதுல குடும்பந்தான் என் கோவில்... அப்படின்னு டயலாக் வேற.... இவனை எல்லாம் நடுத்தெருல நாயை அடிக்கறா மாதிரி அடிக்கணும்.....”,தேவி ஆத்திரப்பட. மதி அவளை சமாதானப்படுத்தினான்...

அடுத்து அந்தப் பையனின் வீட்டில் எடுத்த காணொளிகளைப் பார்க்க பார்க்க அனைவருக்கும் கோவம் மலை அளவிற்கு ஏறியது.... அதிலும் தேவியால் அந்தக் குழந்தைகளைப் பார்க்க முடியவில்லை.... அவளிற்கு முன்னால் அந்தப் பையன் இப்பொழுது இருந்து இருந்தால் அவனை அடித்தே கொன்றிருப்பாள்.

“சந்திரன் சார்.... நமக்கு திடமான  ஆதாரம் கிடைச்சிருக்கு.... இதை வச்சே அவனுக்கு ஆயுள் தண்டனை வாங்கித் தரலாம்....”

“என்ன பிரயோஜனம் மதி சார்.... இன்னும் ஆறே மாசத்துல அவன் வெளில வந்துடுவான்.... அதுவும் மைனர் வேற.... பதினெட்டு வயசாக இன்னும் மூணு மாசம் அவனுக்கு இருக்குது... அதையே காரணமா சொல்லி வெளில விட்டுடுவாங்க....”

“சட்டத்துறைல இருக்கற நீயே இப்படி நம்பிக்கை இல்லாம பேசலாமா பாரதி.... அப்பறம் சாதாரண ஜனங்க எப்படி நம்மளை நம்புவாங்க.....”

“நான் நம்ம சட்டத்தை மதிக்கறேன் சீனியர்.... ஆனா அதை இங்க இருக்கறவங்க அரசியல்வாதிகளுக்கும், பெரிய பணக்கார முதலைகளுக்கும் அடகு வச்சுட்டாங்களே... என்ன பண்ண....”

“எல்லாரையுமே பொதுவா குத்தம் சொல்லாத பாரதி.....”

“நிர்பயா வழக்குல என்னாச்சு சீனியர்... கண்ணுக்கு முன்னாடி நடந்தது.... மைனர் அப்படிங்கற காரணத்துக்காக தப்பு செஞ்ச பையனுக்கு கோர்ட் கொடுத்த தீர்ப்பு என்ன, தம்பி ஒரு பொண்ணை மட்டும்தானே அளவெடுத்த, நாங்க தையல் மெஷின் தர்றோம்... நிறைய பெண்களை கூப்பிட்டு அளவெடுத்து சந்தோஷமா இருன்னு சொல்லி விடுதலை செஞ்சாங்களே.... அது போல நடக்காதுன்னு உங்களால சொல்ல முடியுமா?”, பாரதி கேட்க யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

“சரி இதை எப்படி கையாளலாம் சொல்லு....”

“மதி சார் நீங்க அந்த நடிகரோட கேஸ் தனியா பார்த்துக்கோங்க.... அதையும், இதையும் சேர்க்க வேண்டாம்.... சீனியர் நாளைக்கு அந்த சாட்சி மாத்தி சொன்னாலும் நாம விட்டுடலாம்.... அவன் வெளில வரட்டும்... அப்பறம் அவனை வச்சு செய்யலாம்....”

“தப்பு பாரதி.... சட்டம் படிச்ச நாமே தப்பு பண்ணக்கூடாது....”

“பாதகம் செய்பவரைக் கண்டால், மோதி மிதித்துவிடு பாப்பான்னு அந்த பாரதி சொன்னதை இந்த பாரதி செய்யப்போறா சீனியர்.... மதி சார் உங்களுக்கு நேரா இதை சொல்லக் கஷ்டமா இருக்கு.... ஒண்ணே ஒண்ணு அவன் உயிரோட இருப்பான் அதுக்கு நான் உத்தரவாதம் கொடுக்கறேன்....”

“பாரதி முதல்ல நாளைக்கு கேஸ் எப்படி போகுதுன்னு பார்த்துட்டு அப்பறம் முடிவு செய்யலாம்....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.