14. பெண்ணே என்மேல் பிழை!!! - தீபாஸ்
தன் தங்கையின் எதிரில் அழைபாயும் மனதை அடககுவதற்காக அவன் மறுபுறம் திரும்பி வேறு எதையோ தேடுவதைப்போல் பாவனைசெயது உங்கள் வேலை முடிந்துவிட்டதா நாம் சாப்பிடப்போகலாமா? என்று கேட்டான் .
ஓகே எனக்குப் பசிக்குது போய் சாப்பிட்டலாம் என்ற மதுரா, அப்பொழுது அண்ணா, இந்த உடையில் அண்ணி செமயான அழகுடன் இருக்கிறார்கள். அப்பா! “சான்சே இல்லை” எப்படி அண்ணி இவவளவு அழகாக இருக்குறீர்கள் என்று கேட்டாள் மதுரா. .
அப்பொழுது தன்னை மீறி தன் கண்கள் அவளிடம் போவதை தடுக்கமுடியாமல் அதன் போக்கிலேயே விட்டு கண்களினால் அவளை மேய்ந்து கொண்டே உன் அண்ணனுடைய தேர்வு எப்பொழுதும் ஸ்பெசலானதாகத்தானே இருக்கும் மதுரா, என்றான் மஹிந்தன் .
அவனுடைய முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் ழையா மதுராவிடம் நீங்களும் அழகாகத்தான் இருக்கிறீர்கள் மதுரா, இந்தஉடையும் உங்களின் தேர்வு தான் அதனால் தான் இவ்வுடையில் நான் அழகாக இருக்கிறேன். “உங்களின் அண்ணனால் அல்ல” என்றாள் ழையா .
அவள் கூரியதைகேட்ட மதுரா சிரித்துக்கொண்டே “ஓகே அண்ணி!, நாம் சாப்பிட போகலாமா”, என்றாள் .உடனே ழையா கொஞ்சம் இருங்கள் நான் இதனை மாற்றிவிட்டு வருகிறேன் என்றாள் .
, அண்ணி இதில் நீங்கள் வீட்டில் போடுவதற்கு சில உடைகளை வாங்கியிருக்கிறேன் அதை போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினாள்.
பின் அண்ணா! அண்ணி உடைமாற்றி வருவதற்குள் எனக்கு வீட்டை சுற்றிக் காட்டுங்கள், என்று கூறி ரித்திகாவுடன் மஹிந்தனையும் அழைத்துக் கொண்டு கீழே சென்றாள். வீட்டின் கீழே வந்த மஹிந்தன் மதுரா, என் மொபைலை மாடியில் வைத்துவிட்டு வந்துவிட்டேன், நீங்கள் போய் பாருங்கள் நான் இதோ வருகிறேன் என்று அவன் மாடிக்கு வந்தான் .
அப்பொழுதுதான் ரெஸ்ட்ரூமில் இருந்து வெளியே வந்த ழையாவை பேபி என்ற என்று தாபத்துடன் கூறிக்கொண்டு அவள் சுதாரிக்கும் முன்பே தன்னுடைய கைவளைவினுள் கொண்டுவந்தவன் அவளின் சிவந்த உதடில் தேனருந்த ஆரம்பித்தான் .
கோபத்துடன் அவனை உதற முயன்றாள் ழையா ஆனால் அவனின் பிடி அழுத்தமாக இருந்தது மேலும் அவன் ப்ளீஸ் ழையா என்றவன் சில நிமிடங்கள் கழித்தே அவளை விலக அனுமதித்தான் .
ஏற்கனவே ழையாவிற்கு அவன் முன் நின்றிருந்த கோலம் காரணமாக அவன் முன் செல்ல, அவன் முகம் பார்க்க, ஒருவித தயக்கம் ஏற்பட்டு இருந்தது .மேலும் இப்பொழுதைய அவனின் அணைப்பு மற்றும் இதழ் ஒற்றுதலின் காரணமாக் அவள் விதிர்விதிர்த்து போய்விட்டாள்.
அரண்டு கை கால்கள் நடுக்கத்துடன் நின்றிருந்த ழையாவைப் பார்த்த மஹிந்தன் யோசனையுடன் அவளைப் பார்த்தான். தான் இன்னும் மனதால் அவளை நெருங்காத நிலையில் தன்னுடைய இச்செயலை அவளால் eerkkaஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதனை அவன் உணர்ந்தான் .அதனால் ழையாவின் மேல் அவனுக்கு ஏற்பட்ட கிரக்கம் வடிந்துவிட்டது .
தன்னுடைய தொடுதலை இயல்பாக அவள் ஏற்றுக்கொள்ள முதலில், தான் அவளுடயவன் என்பதை அவள் உணரவைக்கவேண்டும் .இப்பொழுது அவளை ரிலாக்ஸ் செய்யது கீழே கூட்டிச் செல்லவேண்டும் என்று, ழையா வா கீழே போகலாம், சாப்பிடாமல் நமக்காக காத்திருக்கிறார்கள், என்று அவளின் கைபிடித்து கூட்டிச்செல்லும் நோக்குடன் ஓர் அடி அவளை நோக்கிவைக்கவும் ழையா பயத்துடன் ஓர் அடி பின்னால் நகர்ந்தாள் .
ஏ..ஏய் எதுக்கு இப்பொழுது பயப்படர நான் உன்னுடையவன் டீ ,என்று கூறி வலுக்கட்டாயமாக அவளின் கை கோர்த்து கீழே போகும் போது “இப்படி அரண்ட முகத்தை மதுராவிடம் காண்பிக்காதே நான் உன்னை கொடுமை செய்வதாக நினைத்து என்னை உண்டு இல்லை என பேச்சாலேயே கொன்னுபோட்டுடுவா” சோ ரிலாக்ஸ் பேபி என்று கூறிவிட்டு அவளை கூட்டிக்கொண்டு கீழே வந்தான் .
இருவரும் படியில் ஒன்றாக இறங்கிவருவதை திரும்பிப் பார்த்த மதுரா புன்னகையுடன் தன் மொபைலின் படம் பிடித்தாள். அவளின் செயலை பார்த்த மஹிந்தன், “மதுரா ஒன்ஸ்மோர்” என்று கூறி ழையாவை அருகில் இழுத்து அவளின் இடையில் தன் கைபோட்டு தன்னுடன் சேர்த்துப் பிடித்து, சிரிடீ! என்று மெதுவாக ழையாவிற்கு மட்டும் கேட்கும் படியாக கூறினான் .
கீழே வந்ததும் காயத்திரி நான்கு பேருக்கும் சாப்பாட்டை பரிமாற சாப்பிட ஆரம்பிக்கும் போது, மதுராவின் மொபைலில் அவளது கணவன் பார்த்தீபனிடம் இருந்து அழைப்பு வந்தது ,
சொல்லுங்க நான் தான் என்றாள் மதுரா,ம்... இப்பொழுது எடுத்த போட்டோதான் அது சூப்பரா...! இருக்கிறது தானே, என்றாள் மதுரா. இன்னும் அரை மணி நேரத்தில் நான் அங்கு இருப்பேன். நான் அண்ணனிடம் சொல்லிக்கொள்கிறேன் என்று கூறி தொடர்பைத்துண்டித்தாள் மதுரா .
பின் மஹிந்தனிடம் இங்க பார் அண்ணா! நான் எடுத்த போட்டோ என்று காண்பித்தாள் மதுரா. மஹிந்தனுக்கு அடுத்து ழையா உட்கார்ந்திருந்தாள் அவளுக்கடுத்து மதுரா அமர்ந்திருந்தாள் .எனவே மதுராவின் மொபைலை கையில் வாங்குவதற்காக ழையவின்பக்கம் சாய்ந்து வாங்கினான். இயல்பான அவனின் செயல் ழையாவின் மேனியில் ஓர் நடுக்கத்தை ஏற்படுத்தியது .