(Reading time: 18 - 35 minutes)

னால் முதல்முதலாக நான் கட்டுப்பாட்டை இழந்தது உன்னிடம் மட்டும் தான் .முதலில் உன்னை பார்த்தபோதே எனக்குள் ஓர் சலனம் வந்தது உன்னை என் அருகில் நிறுத்திப் பார்த்தால் எனக்கு உன்மேல் உள்ள சலனம் போய்விடும் என்று நினைத்தேன்

ஏனெனில் முதல் பார்வையில் என்னை சலனப்படுத்திய பெண்களை நான் நெருங்கிப் பார்த்தபோதுதான் அவர்களில் மீதான் என் சலனம் அவர்களின் பேச்சாலோ, அல்லது கேரக்டராலோ சிலநிமிடங்களில் காணாமல் போவதை நான் உணர்ந்துள்ளேன்

ஆனால் உன்னை என் அருகில் கொண்டுவந்தபின்பும் உன்மீதான என் ஆர்வம் கூடிக்கொண்டுதான் போனது .எப்பொழுதும் நிலை தடுமாறாமல் இருக்கும் நான் உன் அருகாமையில் என் கட்டுப்பாடு சிறிது சிறிதாக் குறைந்துகொண்டே வந்தது .

அப்பொழுது யோசிக்கும் போதுதான் தெரிந்தது நீ என்னுடையவள் எனக்காகப் பிறந்தவள், என்று கூறியவன் “ஐ லவ் யூ” ழையா என்றவன் நின்று கொண்டிருந்த அவளின் முன் மண்டியிட்டு அவளின் கைப்பற்றி அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தவன் பார்வை, அவள் கண்களுக்குள் ஊடுருவியது,

அவனுடைய பார்வை வீச்சு அவள் இதயக் கதவுகளை தட்டி திறக்குமாறு அதிர்வுகளை ஏற்படுத்தியது . அவளின் புறங்கையில் முத்தமிட்டபடி, ப்ளீஸ்! “லவ் மீ அண்ட் அக்சப்ட் மீ, மிசஸ் ழையா மஹிந்தன்”, என்று கூறினான் .

கவிழையாவின் முன் மண்டியிட்டு நின்ற மஹிந்தன் அவளின் விருப்பமில்லாமல் மணந்தாலும் தற்போது அவளது கணவன் அதுவும் கம்பீரமான அழகான மற்றவர்களை பார்வையிலேயே அடக்கும் தன்மைவாய்தவன் .யாருக்கும் அடங்காதவன் தன்முன் அடங்கி தன்னிடம் காதலை சொன்னதும் தன் அன்புக்காக ஏங்கி கண்களில் தன்னை சிறை பிடிக்கப் பார்ப்பதையும் கண்ட கவிழையாவின் மனம் ஒரு நிமிடம் அவன்பால் சரிந்தது.

பின் ம்...கூம், இவன் என்னை வசியம் செய்யப் பார்கிறான் என்று தலையை குலுக்கி தன்னிலை அடைந்தவள் .அவன் முகத்தை பார்த்து வெறுமையாக சிரித்தபடி, அவன் கை பற்றி தூக்கி நிற்கவைத்தாள் .

“அதுதான் நீங்கள் என் மேல் ஆசை பட்ட காரணத்திற்காக என் அனுமதியில்லாமலே என்னை சிறை பிடித்து வைத்துவிட்டீர்களே” .பிறகு என்ன, என்று கூறினாள்.

ஏய் சும்மா அதையே பிடிச்சுட்டு தொங்காத டீ ,நீயும் வேண்டுமானால் உன் முந்தானையில் என்னை பதிலுக்கு சிறை பிடித்துக்கொள். நான் எப்போதடா நீ என்னை கைது செய்வாய் என்று ஏங்கிக் கொண்டுதான் இருக்கிறேன் பேபி என்று குலைந்து சொல்லிக்கொண்டே அவளின் அருகில் நெருங்கிச் செல்ல முயன்றதும், ழையா கோபத்துடன் விலகி நின்றபடி அவனை பார்த்து முறைத்தாள். உடனே

ஓகே இப்பொ இதை பற்றி பேசவேண்டாம் வா மாடிக்குப் போய் நாளைக்கு ரிப்போர்ட்டர்களிடம் எப்படி பேசவேண்டும் என்று கூறுகிறேன் என்று கூறியபடி மாடிக்கு போவதற்கு திரும்பியவன் தயக்கத்துடன் நின்றவளின் புறம் திரும்பி ஏய், வா...வா... இன்று நிறைய நடந்திடுச்சு, ரொம்ப டென்சன் அத்துடன் நீ என்கூடவே இருக்கும் சந்தோசம், நாளைக்கு பிரஸ் கூட பேசுறத பத்தி யோசனைன்னு ரொம்ப மூளை சூடாகிடுச்சு. கொஞ்சம் தூங்கி அதை கூல் பண்ணனும் என்று சொல்லியபடி அவள் கைபிடித்து தன்னுடன் இழுத்துச்சென்றவன் .

நீபாதி நான்பாதி கண்ணே –அருகில்

நீயின்றி தூங்காது கண்ணே .

என்று பாடலை படிக்க ஆரம்பித்தவுடன் ,ழையா, ‘அப்பா இந்த கொசுத்தொல்லை தாங்கலப்பா” என்று கேலிபோல சொன்னாள்.

உடனே மஹிந் கிண்டலா பண்ற என்று சிரித்துக்கொண்டே கூறியவன் .உனக்கு ஒன்று நியாபகம் இருக்கா ழையா? அன்னைக்கு ஒரு நாள் நான் உன்னை உன் அம்மா வீட்டில் இறக்கிவிட போகும் போது காரில் இருந்த ரேடியோவை ஆன் செய்தப்போ என் மனசை உனக்கு சொல்வது போல சாங் வந்தது பார் “அப்போ ஒரு பீல் வந்துச்சு பாரு....” அதை எப்படி சொல்றது....? என்றவன் ம்...கூம் அதை சொல்லெல்லாம் முடியாது .அதிலிருந்து தினமும் தூங்கும் போது ரேடியோவில் பாட்டுக் கேட்டுவிட்டுத்தான் தூங்குவேன் தெரியுமா.

அன்னைக்கு காரில் உன்னை கூட்டிப் போவதற்கு முன்பு ரொம்பவும் என் மனச நீ புண் படுத்தவும் செய்தாய் என்றான் .

அவன் கூறவும் ழையாவிற்கு அன்று அவன் தன்னை திடீர் என்று அனைத்ததும், தான் அவனை தள்ளிவிட்டு கத்தியை தன் கழுத்தில் வைத்து அவனை மிரட்டியதும் அவள் மனதில் வலம்வந்ததை அவளின் மெளனத்தின் மூலம் உணர்ந்த மஹிந்தன் அவளை ஒட்டி நின்றான்

அவன் ஒட்டி நின்ற உடனே அவள் ஒரு அடி தள்ளி செல்லவும், அவளின் கைப் பற்றி “நீ என்னவள் பேபி என்னுடைய தேவைகளையும் ஆசைகளையும் உன்னிடத்தில் நான் பூர்த்திசெய்ய நினைப்பதில் தவறு இல்லை என்று தான் அன்றைக்கும் நான் நினைத்தேன்.” என்றவன் அவளை ரசித்தபடி, இன்றும் என்றவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.