(Reading time: 9 - 17 minutes)

டார்லிங்க்… இதை கொஞ்சம் பிடியேன்…”

ரித்தி கூற திரும்பவே இல்லை சந்தா…

“டார்லிங்க்… உன்னைத்தான்….” என அவளின் தோள் தொட்டு திருப்பிய ரித்தி, அவளது மௌனமான விழிகளைக் கண்டு ஒரு நொடி தயங்கினாள்… பின் அதனைக் கண்டு கொள்ளாதவாறு,

“இது ஓகேவான்னு பாரு…” என்றாள் ஒரு ஜோடி கம்மலை கைகளில் எடுத்துக்கொண்டு…

அவளை எந்த உணர்ச்சியும் இல்லாது ஏறெடுத்து பார்த்த சந்தாவின் கையைப் பிடித்து இழுத்து வந்து கட்டிலில் அமர வைத்தாள் ரித்தி…

“ஹ்ம்ம்.. இது பொருத்தமா இருக்கும்ல?... சொல்லு டார்லிங்க்…”

“யாருக்கு?...” சந்தாவின் இறுக்கமான குரல் வெளிவர,

“ஹ்ம்ம்… என்னோட செல்லக்குட்டிக்குத்தான்…” என்றாள் ரித்தியும்…

“உன்னோட செல்லக்குட்டியா அது யாரு ரித்தி?...” வேதா சட்டென சந்தாவின் அருகில் அமர்ந்து கொண்டு கேட்க,

“வேற யாரு?... எல்லாம் நம்ம ரேணு குட்டி தான்….”

ரேணு என்ற பெயரை கேட்டதும், சந்தாவின் இதழில் ஒரு மென்முறுவல் தோன்றியது…

அதைக் கவனித்த ரித்தி, “கொடுத்துடு டார்லிங்க் இதை என் செல்லத்துக்கு…” என அந்த கம்மலை நீட்ட, சந்தாவோ அவளைப் பார்த்தாள்…

“என்ன டார்லிங்க் பார்க்குற?... அவ போன தடவையே கேட்டால்ல, அதான்…”

“சந்தாக்கா… அப்படியா சொல்லவே இல்ல பார்த்தீங்களா நீங்க?...” வேதா ஆச்சரியத்துடன் கேட்க,

“எதை?...” என வினவினாள் சந்தா…

“நீங்க ஊருக்குப் போறதை தான்….”

“என்ன?????????!!!!!!...................” என சந்தாவின் விழிகளே கேட்க,

“ஹேய்… டார்லிங்க்… நீ ஊருக்குப் போய் ரொம்ப நாளாச்சுல்ல… பாவமில்ல ரேணு… ரொம்ப ஏங்கி போயிருப்பாடி… லாஸ்ட் டைம் கூட எப்படி அழுதா போன்ல… அதனால ப்ளீஸ் போயிட்டு வாடி…” என்றாள் ரித்தி அவளை சமாதானம் செய்யும் பொருட்டு…

எதுவும் சொல்லாமல் எழுந்து கொள்ள முனைந்தவளை தடுத்த ரித்தி,

“அந்த சின்னப்பிள்ளையைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருடி… அவ பாவம்… இந்த ஒரு தடவை மட்டும் அவளைப் போய் பார்த்துட்டு வா… அப்புறம் நான் உன்னை கம்பெல் பண்ணவே மாட்டேன்… இது வேதா மேல சத்தியம்…”

ரித்தி சொல்லிக்கொண்டே வேதாவின் தலை மீது கைவைக்க போக,

“அடிப்பாவி… உனக்கு சத்தியம் பண்ண, நான் தான் கிடைச்சேனா?... ஓடிப்போயிடு சொல்லிட்டேன்…”

துள்ளிக்குதிக்காத குறையாக எழுந்தாள் வேதா கட்டிலை விட்டு...

“பாரு சந்தா உன் தங்கச்சி பண்ணுற அலம்பலை….. இதெல்லாம் நீ ஏன்னு கேட்கமாட்டியா?...”

“சந்தாக்கா, இந்த குரங்கை சும்மா இருக்க சொல்லுங்க… இல்லன்னா அவ்வளவுதான் சொல்லிட்டேன்…”

“ஹே… சும்மா நிறுத்துடி… ஓவரா பில்டப் கொடுத்துட்டு…”

“யாருடி பில்டப் கொடுக்குறா?... நானா?...”

“பின்ன நானா?...”

“என்ன நான் பில்டப் கொடுத்தேன்?... சொல்லு ரித்தி குரங்கே…”

““உனக்கென்ன புள்ளிமான்னு நினைப்பா?.. ஓவரா குதிக்குற?... இதெல்லாம் பில்டப் இல்லாம வேற என்னவாம்?... அடியே அடக்கி வாசிடி….”

“நான் உங்கிட்ட சொன்னேனா அப்படி?... நீயா நினைச்சிகிட்டு கேட்டா நான் அதுக்கு பொறுப்பாவேனா?...”

“இதோடா… உனக்கும் வேற வேலை இல்லை… உன் பாய்ஃப்ரெண்ட்கும் வேற வேலை இல்லை… இரண்டும் ஒரே கேஸ் தான்… அலம்பல் கேஸ்…”

“ஹேய்… இப்போ எதுக்குடி, நீ அவரை தேவை இல்லாம உள்ள இழுக்குற?... என்னப் பத்தி பேசும்போது என்னைப் பத்தி மட்டும் தானடி நீ பேசணும்?...”

வேதா வரிந்து கட்டிக்கொண்டு வர,

“பார்த்தீயா டார்லிங்க்… நான் காலையிலேயே சொன்னேனே நீ நம்பினியா?... இப்போ பாரு…. உன் தங்கச்சியே ப்ரூவ் பண்ணுறா….”

சந்தாவை ரித்தி துணைக்கழைக்க,

“என்னடி ப்ரூவ் பண்ணினேன் நான்… சொல்லு பார்ப்போம்…”

வேதா கோபமாக கேட்க,

“என்றும் பதினாறு அதான் உன் பாய் ஃப்ரெண்ட், பஸ்ல போகும்போது, ஸ்டாப் வர்றதுக்கு முன்னாடியே, ரன்னிங்க்லயே இறங்குவார்… மனசுல இன்னும் இளமை ஊஞ்சல் ஆடுதுன்னு நினைப்பு அவருக்கெல்லாம்…”

“அதுக்கு?...”

“அதுக்கு என்னவா?... இப்போ நீயும் அப்படித்தான துள்ளிக்குதிச்ச?.. ஷப்பா, இந்த லவர்ஸ் இம்சை தாங்கலைப்பா… ஆனாலும் இந்த ஒற்றுமை ரொம்ப ஓவர் தாண்டி… அதான் அடக்கிவாசிக்க சொன்னேன்….”

ரித்தி தன் கண்களை உருட்டிக்கொண்டே, கைகளை ஆட்டி ஆட்டி இலகுவாக சொல்ல, அவளின் முதுகில் சட்டென ஒன்று வைத்தாள் சந்தா…

“ஸ்… ஆ…..” என கத்தியவள், அடி விழுந்த நொடியே, வேதாவின் மேல் பாய போக, அவளைப் பிடித்து நிறுத்தினாள் சந்தா….

“லூசு… என்ன பேச்சு இது?...” என்ற கேட்ட சந்தாவின் குரலில் இப்போது பழைய இறுக்கம் தென்படவில்லை…

அதைக் கவனித்த ரித்தி, “பின்ன என்ன டார்லிங்க்… இவங்க லவ் ஓவரா தான இருக்கு…” என்றவள்,

வேதாவிடம் திரும்பி, “ஆனாலும் ஒருநாள் இல்ல ஒருநாள், உன் பாய் ஃப்ரெண்ட், ரன்னிங்க்ல இறங்கும்போது ஸ்லிப் ஆகி, அந்த வெடவெடக்குற மூக்கு உடைய போகுது… அப்புறம் புரியும் வயசான காலத்துல அலம்பல் எல்லாம் ஓரளவுக்குத்தான் பண்ணனும்னு… என்ன சரியா?... சொல்லிவை உன் பாய்ஃப்ரெண்ட்டுக்கு போன் போட்டு…”  என இலகுவாக ரித்தி கூற,

“யாரு மூக்கு உடையும்னு இப்போ காட்டுறேன்…” என்ற வேதா, ரித்தியின் முகத்தில் தலையணையைக் கொண்டு வேகமாக அடிக்க,

“ஆ……” என அலறிக்கொண்டே, “அய்யோ என் மூக்கு போச்சே…..” என கட்டிலில் விழுந்தாள் ரித்தி…

அவளின் மேல் பாயவிருந்த வேதாவினை தடுத்த சந்தாவிற்கு புன்னகை லேசாக எட்டிப்பார்க்க,

“விடுங்க சந்தாக்கா… இன்னைக்கு இவளை ஒருவழி பண்ணாம விடமாட்டேன் நான்… காலையில இருந்து எங்கிட்ட இந்த வம்புதான பண்ணுறா?... இன்னைக்கு இவளை நான் புரட்டி எடுக்கலைன்னா பாருங்க….” என சந்தாவினை விலக்கிவிட்டுவிட்டு,

“பேசுவீயா இனி அந்த ஆளோட என்னை கம்பேர் பண்ணி?.. பேசுவியாடி?...” என கேட்டுக்கொண்டே தலையணையைக் கொண்டு அடிக்க, சந்தாவோ அவர்களை விலக்க போராடினாள் மறுபடியும் புன்னகையோடு…

“டார்லிங்க் நீ விடு… இவளை நான் பார்த்துக்குறேன்… இவ பாய் ஃப்ரெண்டை நான் திட்டிட்டேனா?.. கோபத்தை பார்த்தீயா இவளுக்கு?... அடியே… நல்லா கேட்டுக்கோடி… உன் பாய் ஃப்ரெண்டுக்காவது மூக்கு தான் உடையணும்… ஆனா உனக்கு வாயும் சேர்த்து உடையும்டி… நான் முட்டை மந்திரிச்சி வைக்குறேனா இல்லையான்னு பாரு…” என ரித்தி கூற, அவளை தலையணையால் அடித்துக்கொண்டே இருந்தாள் வேதா மூச்சு வாங்க…

இரண்டு பேரையும் விலக்க நினைத்து முடியாமல், கடைசியில், ஓரமாக நின்று இரண்டு பேரையும் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள் சந்தா அழகாக…

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்… எப்படி இருக்கு இந்த வீக் அப்டேட்?...

படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்…

மீண்டும் அடுத்த வாரம் பூக்கும் புது எழில் வானில் சந்திக்கலாம்…

எழில் பூக்கும்...!

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1122}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.