(Reading time: 17 - 34 minutes)

ம்ம் சொல்லு மை டியர் என்றவாறு அவளின் முடிகற்றைகளை கைகளால் அளந்தான்..வேண்டாம் கார்த்திக்..இதெல்லாம் சரியேயில்ல என்றவளுக்கு குரல் உள்ளேயே போயிருந்தது..சட்டென எழுந்து அவள் நகர முற்பட அவளை இழுத்த வேகத்தில் அவன் மார்பில் வந்து விழ கார்த்திக்கின் செயினில் சிக்கிக் கொண்டது அவளின் தலைமுடி..

இருவருமாய் போராடி அதனை விடுவிக்க சட்டென அவளின் பார்வை குத்தி நின்றது அந்த டாலரில்..

கார்த்திக் இது????

ஏன்டா இது எங்க பாட்டி எனக்கு குடுத்ததாம் அவங்களுக்கு நானா ரொம்ப இஷ்டம்..அதான் வேற யாருக்கும் இல்லாம எனக்கு குடுத்தாங்களாம்..லேசாய் ஒரு சிரிப்பு அவளிடத்தில்,

ஏன் சகி சிரிக்குற??

உன் பாட்டியவிட இந்த டாலருக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் அதனாலதான் அது உன்ன விட்டு எங்கேயும் போல என்று கூறி அவனை பார்க்க அந்த பார்வையில்தான் எத்தனை வசீகரம்..உயிர்வரை குளிர்பரவுவதாய் உணர்ந்தான் கார்த்திக்..

எங்க இத தொலச்சுடுவேனோனு பயந்தேன் நல்ல வேளையா உன்கிட்டயே வந்துருக்கு..

இத நீ எப்படி தொலைக்க முடியும் சகி??என்ன சொல்ற??

உங்க எல்லா கேள்விக்கும் சீக்கிரமே பதில் கிடைக்கும் கார்த்திக் என மிருதுவாய் அவன் கன்னத்தை தடவினாள்..அவள் கை மீது கார்த்திக் தன் கையை வைக்க சட்டென அந்த பார்வையில் மாற்றம் இது அவனின் சஹி..

கிளம்பு கார்த்தி அம்மா பாத்தா அவ்ளோதான் என இழுத்து தள்ளாத குறையாக அவனை வெளியில் அனுப்பினாள்.

ங்கிருந்து கிளம்பி சிவாவோடு பேசியிருந்த படியே அந்த பார்க்கை சென்றடைந்தான்..என்ன கார்த்திக் எனி க்ளு??

ம்ம் எந்த அளவு யூஸ்புல்லா இருக்கும்நு தெரில என்று டாலர் விவரத்தை கூறினான்..

ஏன் கார்த்திக் நாம ஏன் உங்க பாட்டிகிட்ட இதபத்தி கேக்க கூடாது??

திடீர்நு சம்மந்தமேயில்லாம இதபத்தி என்னனு கேக்குறது சிவா??

ம்ம் அதுவும் கரெக்ட்தான் வேணா ஒண்ணு பண்ணுவோம் எனக்கு இந்த மாடல் ரொம்ப பிடிச்சுருக்கு கடையில இதமாறி செய்ய சொன்னா இது அப்போ உள்ள மாடல்நு சொல்றாங்க இதயே நா குடுக்கலாம்நு இருக்கேன்னு சொல்லுங்க??என்ன ரியாக்ஷன்னு பாப்போம்..

ம்ம் ஓ.கே வா தான் இருக்கு சரி ட்ரை பண்றேன்..

ந்த வார இறுதியில் காஞ்சிபுரத்திலிருந்த தன் பாட்டியை பார்ப்பதற்காக சிவாவோடு சென்றான்..

கார்த்தி வாடா கண்ணா எவ்ளோ நாள் ஆச்சு உன்னபாத்து பரவால்லையே கல்யாண மாப்பிள்ளைக்கு என்ன பாக்குறதுக்கு கூட நேரமிருக்கா??

பாட்டி என்ன இப்படி சொல்லிட்டீங்க சரி அதெல்லாம் இருக்கட்டும் இவரு தான் நம்ம வீட்டு மாப்பிள்ளை நம்ம ஷரவந்திக்கு பேசிருக்கோம்..

அடடே என்னோட புது பேரனா வாப்பா வா உக்காரு என்ன சாப்ட்ற??

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் பாட்டி மொதல்ல நீங்க உக்காருங்க..ஆமா தாத்தா எங்க காணும்??

அவருக்கு வேற வேலையென்ன பின்னாடி தோட்டத்துல தான் இருப்பாரு இப்போ வந்துருவாரு..உங்க ரெண்டு பேரையும் பாத்தா ரொம்ப சந்தோஷப்படுவாரு..சரி ரெண்டு பேருக்கும் என்ன பிடிக்கும்நு சொல்லுங்க விருந்து போட்டு அசத்திரேன்..

பாட்டி நீங்க எது பண்ணிணாலும் நல்லாதான் இருக்கும் ஒரு புடி புடிச்சுட்டுதான் போவோம்..கொஞ்ச நேரம் பேசிட்டு இருங்க அப்பறமா சமைக்கலாம்..-சிவா..

சில நிமிட பொதுவான உரையாடல்களுக்கு பிறகு கார்த்திக் மெதுவாய் ஆரம்பித்தான்..

ஆங்ங் பாட்டி இந்த டாலர் இருக்குல இது சிவாக்கு ரொம்ப பிடிச்சுருக்காம் அதான் பேசாம மாப்ளைக்கு செயின் போடும் போது இதையும் சேர்த்து போடலாம்நு இருக்கேன் நீங்க என்ன சொல்றீங்க??

என்ன கார்த்தி இப்படி சொல்லிட்ட??இது மாதிரி வேற வேணா செஞ்சு போட்றலாம் இது வேண்டாம்ப்பா..

இல்ல பாட்டி நாங்க கடையில விசாரிச்சு பாத்துட்டோம் இது அந்த காலத்து டிசைனாம் இப்போ பண்ணிணாகூட சில ஆல்ட்ரேஷன் பண்ணிதான் கிடைக்குமாம்..அவங்க காட்றதெல்லாம் இவருக்கு பிடிக்கல அதுக்கு அப்பறம்தான் இதையே குடுத்துறலாம்நு முடிவு பண்ணேன்..

இல்ல கார்த்தி அது சரி வராது..

ஏன் பாட்டி இப்போதான் வாய்நிறைய என்ன பேரன்னு கூப்டீங்க எனக்காக இதகூட தரமாட்டீங்களா??

அட நீ வேறப்பா நா குடுத்தாலும் அது உன்கிட்ட இருக்கனுமே??

என்ன பாட்டி சொல்றீங்க??????

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.