“தாத்தா… தேங்க்ஸ் சொல்லிடுங்க… நான் சொல்லாமலே இங்க கூட்டிட்டு வந்ததுக்கு…”
அவள் தகப்பனைப் பார்த்துக்கொண்டே சொக்கநாதனிடம் சொல்லிவிட்டு முகம் திருப்பியபடி உள்ளே சென்றாள் வேகமாய்…
அதை கவனித்த ராகேஷ்வரருக்கு புன்னகை உதிக்க, மௌனமாய் அவரும் மகளை பின் தொடர்ந்தார்…
“வாடா ரித்தி…………….. யாருக்கு தேங்க்ஸ் சொல்லுற?...”
வரவேற்றபடி வந்தான் பிரசன்…
“அண்ணா….” என ஓடிச்சென்று பிரசனைக் கட்டிக்கொண்டாள் ரித்தி…
“எப்படிடா இருக்குற?... ஊர்ல இருந்து எப்ப வந்த?... தனியாவா வந்த?...”
அவன் நலம் விசாரிக்க,
“இப்போதான் பிரசன் வந்தா… வந்ததும் காபி கூட குடிக்கலை… நேரா இங்க கிளம்பி வந்துட்டா…”
வசுந்தரா கூற, “வாங்க சித்தி…” என வரவேற்றான் அவன்…
அவரைத் தொடர்ந்து, ராகேஷ்வரும், சொக்கநாதனும் வர, அவர்களையும் வரவேற்றான் அவன் இன்முகத்துடன்…
“பிரசன் நீ யாரை வெல்கம் பண்ணுற?..”
கேள்வி கேட்டபடி வந்த நைனி அங்கே இருந்தவர்களைக் கண்டதும் புன்னகையுடன் ஓடிவந்தாள்… அவளைத் தொடர்ந்து ராஜேஷ்வரரும், கலைவாணியும் வர, நலம் விசாரிப்புகள் தொடர்ந்த மாத்திரத்திலேயே, ரித்தி பிரசனை தனியே இழுத்து சென்றாள்…
“அண்ணா… நான் சொன்னா கேட்பீயா மாட்டீயா?...”
“இதென்ன ரித்தி கேள்வி…”
“சொல்லு கேட்பீயா மாட்டீயா?....”
“கண்டிப்பா கேட்பேன்….”
“அப்போ சந்தாகிட்ட பேசு….”
சந்தா……………..
பெயரைக் கேட்டதும் உச்சி முதல் பாதம் வரை உணர்ச்சிகள் பொங்கி எழுந்தது அவனுக்கு…
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்… எப்படி இருக்கு இந்த வீக் அப்டேட்?...
லாஸ்ட் வீக் அப்டேட் தராமல் போனதற்கு மன்னிக்கவும்…
படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்…
மீண்டும் அடுத்த வாரம் பூக்கும் புது எழில் வானில் சந்திக்கலாம்…
எழில் பூக்கும்...!
{kunena_discuss:1122}