அன்று வீடு திரும்பிய போது, எப்படியாவது நந்திதாவை சாமாதானப் படுத்தி விடுவது என்ற முடிவுடன் இருந்தான் உதய்.
ஆவலுடன் அவர்களின் அறையினுள் சென்றால், அவளை காணவில்லை...!
கீழே கண்ணில் படவில்லையே... எங்கே போயிருப்பாள்?? தோட்டத்தில் இருப்பாளோ???
இந்த நேரத்தில் அங்கே என்ன செய்கிறாள்???
அவனை தவிர்ப்பதற்காக அங்கே இருக்கிறாளோ???
அவசரமாக அவன் உடை மாற்றி கீழே செல்ல, ரேவதி அவனின் எதிரே வந்தாள்..
“உதய், இப்போ தான் உன்னை கூப்பிட சொல்லிட்டு வந்தேன்... வா சாப்பிடலாம்...” என்றாள்.
“நந்திதா எங்கேம்மா....?”
ரேவதி பதில் சொல்லாமல் மகனை பார்க்க...
“இல்லை... அவ ரூம்ல இல்லை அதான் கேட்டேன்....” என்றான் உதய்.
“தோட
...
This story is now available on Chillzee KiMo.
...
்று பூரிப்புடன் விவரித்தாள் ரேவதி.
இதை அவர்கள் தன்னிடம் இப்போது சொல்வதற்கு இன்று அவள் நடந்தது கொண்டது தான் காரணமா??? என்ற கேள்வியுடன் யோசித்த நந்திதா, அடுத்த வினாடியே இருக்காது என முடிவு செய்துக் கொண்டாள்...
இவர்களாவது, அவளை பற்றி யோசிப்பதாவது... ஹுஹும்... நடப்பதா அதெல்லாம்???