10. நீதான் என் சந்தோசம் - ராசு
மஞ்சரியின் தாய் மல்லிகாவுக்கு பதினாறு வயதிலேயே திருமணத்தை முடித்துவிட்டனர் அவளது பெற்றோர்.
அவள் திருமணத்தின் போது அழகான சிறு பொம்மை போன்று இருந்தாள்.
அப்போதே அவளது கணவன் மாரிமுத்துவின் முரட்டுத்தோற்றம் கண்டு அவளுக்கு பயம்தான். அத்தோடு குடி வேறு.
அவள் பயத்துடனேயேதான் கணவனுடன் குடும்பம் நடத்தினாள்.
அடுத்தடுத்து மூன்று பெண் குழந்தைகள்.
மூத்தவள் ரஞ்சிதம், அடுத்து மஞ்சரி, இளையவள் அஞ்சலி.
மூத்தது பெண் குழந்தையாக பிறந்தால் அது அதிர்ஷ்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
அவனுக்கு குடித்துவிட்டு வந்தால் மனைவி வேண்டும்.
அவளோ பெண் பிள்ளைகள், வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கணவனிடம் மறுக்க அடி விழும்.
அப்படி ஒருநாள் கட்டாயப்படுத்த அதை மஞ்சரி பார்த் துவிட்டாள்.
அவள் பார்த்துவிட்டாள் என்று தெரிந்த உடனே மல்லிகா குன்றிப்போய்விட்டாள்.