கடன் கொடுத்த அந்த ஆள் என்ன செய்வாரோ என்ற தயக்கத்துடனே அந்த திருமண ஏற்பாட்டை கவனித்தனர்.
ஆனால் அவரோ சிரித்த முகத்துடன் அந்த திருமணத்திற்கான செலவுப்பணத்தையும் கொடுத்தார்.
அவரே வயது வித்தியாசம் உணர்ந்து மனம் மாறிவிட்டதாக அவர்கள் சந்தோசப்பட்டனர்.
ரஞ்சிதாவிற்கு திருமணம் ஆகும் வரையிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை.
அவள் புகுந்த வீட்டிற்குப் போன பிறகு அந்த ஆள் திரும்பவும் வந்தார்.
“என்னம்மா? முன்னை விட கடன் தொகை அதிகமாயிடுச்சு. தொகை பெரிசுங்கிறதால் இப்ப என் விருப்பமும் மாறிடுச்சு. ரஞ்சிதாவைவிட மஞ்சரி ரொம்ப அழகா இருக்கா. இளமையாவும் இருக்கா. நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன். இல்லேன்னா வாங்கிய கடனைக் கொடுக்கலைன்னு புகார் கொடுத்து க
...
This story is now available on Chillzee KiMo.
...
சாப்பிடறதில் சந்தோசமே? இன்னிக்கு மதிய சாப்பாடு தயார் செய்ய அவகாசம் இல்லைன்னு காலை டிஃபனும், இரவு டின்னரும் மட்டும் செய்வதாக சொல்லியிருக்கேன். நீ இப்படி தூங்கறியே?”
“நீ உண்மையிலேயே சொன்னியா மலர்? நீ ஏதோ விளையாட்டுக்கு சொன்னேன்னு நினைச்சேன்.”
“இதில் விளையாடறதுக்கு என்ன இருக்கு?”