(Reading time: 16 - 31 minutes)

ரைமனதாய் அவனுக்கு சம்மதம் தெரிவித்து அங்கிருந்து கிளம்பினான்..மாலை நேரம் சேகரை வெளியில் ஒரு ஹோட்டலில் சந்திப்பதாய் ஏற்பாடு..அதன்படி சிவாவோடு காத்திருந்தான் கார்த்திக்..சில நிமிடங்களில் அங்கு வந்தவர் கார்த்திக்கை அங்கு கண்டு ஆச்சரியப்பட்டார்..

என்ன சிவா மாப்பிள்ளையும் வந்துருக்காரு என்ன விஷயம்???பதட்டம் வெளிப்படையாகவே தெரிந்தது அவர் குரலில்..

சித்தப்பா ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க ஜஸ்ட் ஒரு விஷயத்தை உங்க காதுல போட்டு வைக்கலாமேநு கூப்டோம் மத்தபடி ஒண்ணுமில்ல..

கார்த்திக் கேட்டுகொண்டபடி டாலரைபற்றி மட்டுமே கூறினான்.சித்தப்பா அது கார்த்திக்கோட குடும்ப நகை அதஎப்படி நம்ம சஹானா பாத்துருக்க முடியும் அதுவும் ஏதோ அவளோடது போலவே பேசிருக்கா இது மாறி இன்னும் ஒண்ணு ரெண்டு இன்ஸ்டென்ஸ் கூட இருக்கு அதான் உங்ககிட்டயும் ஒரு வார்த்தை சொல்லி வச்சா நல்லதுதானேனு நா தான் சொன்னேன்..

என்னப்பா என்னென்னவோ சொல்றீங்க?? சஹானாக்கு ஒண்ணுமில்ல இல்ல??

ஐயோ மாமா அதெல்லாம் இல்ல நா இருக்கேன் அவளுக்கு துணையா..இல்ல எதாவது கோவிலுக்கு போய்ட்டு வந்தா இந்த குழப்பமெல்லாம் தீருமோநு ஒரு தாட் அதனால தான் உங்ககிட்ட சொல்ல சொன்னதே..அவ ராசிப்படி எதாவது கோவிலுக்கு போக வேண்டியது நீங்க போகாம விட்டுருக்கீங்களா??என்றவாறே இதற்குமேல் இதை பேச வேண்டாம் என சிவாவிடம் கண்ஜாடை காட்ட அவனும் அதை புரிந்து கொண்டு சம்மதமாய் தலையசைத்தான்..

அப்படியெல்லாம் ஒண்ணுமில்லயே மாப்ள என ஒரு நொடி யோசித்தவர் ஆங்ங் எங்க குடும்பத்துல யாருக்கு கல்யாணம்னாலும் கல்யாணத்துக்கு முன்னாடி குலதெய்வம் கோவில்ல பொண்ணு மாப்பிள்ளையை கூட்டிட்டு போய் பூஜை நடத்துரது வழக்கம்..நா அத மறந்தே போய்ட்டேன்..அத வேணா பண்ணீடலாம்ப்பா..

பாத்தீங்களா சித்தப்பா உங்ககிட்ட சொன்னதும் எவ்ளோ நல்லதா போச்சு பாருங்க சரி கார்த்திக் அப்போ நீங்க உங்க வீட்ல பேசிட்டு சொல்லுங்க ஒருதடவை போய்ட்டு வந்துருவோம்..

ம்ம் அதுவும் கரெக்ட்தான் நா பேசிட்டு சொல்றேன் சிவா..

கார்த்திக் உங்ககிட்ட நானும் ஒருவிஷயம் சொல்லனும்-சேகர்..

என்ன மாமா சொல்லுங்க??

தப்பா எடுத்துக்காதீங்க உங்ககிட்ட சொல்ல வேண்டாம்நு நினைக்கல ஏனோ அப்போ அது தேவையில்லையோநு தோணிச்சு பட் இப்போ சொல்றேன்..சஹானா பிறந்த ஒரு வாரத்துல என்வீட்டு வாசல்ல ஒரு சாமியார் வந்து உக்காந்திருந்தாரு அவரு காசு பணமும் கேக்கல பசிக்குதுநு வரல இன்னும் சொல்ல போனா அவரு எவ்ளோ நேரமா உக்காந்திருந்தாருநு கூட எங்களுக்கு தெரியாது தற்செயலா வெளில கிளம்புறதுக்காக வாசலுக்கு வந்தா திண்ணைல உக்காந்து என்ன பாத்து சிரிச்சாரு..உடம்பு புல்லா வீபூதியும் நெத்தியில திருநாமமுமா பாக்கவே அப்படி ஒரு தெய்வீக களை.. கார்த்திக்கிற்கு தான் பார்த்தவரின் முகம் மனகண்ணில் நிழலாடியது..சஹானாவோட அம்மா தீவிரமான சிவ பக்தை இன்னும் சொல்லனும்னா சஹானாவே எங்களுக்கு அந்த ஈசன் கொடுத்த வரம்தான்..அதனாலயே இந்தமாதிரி சந்நியாசிங்களை பாத்தா என் மனைவி அவங்களுக்கு என்ன வேணும்னு பாத்து செய்வா. என்ன ஐயா வேணும் எதுவும் சாப்டுறீங்களாநு கேட்டேன்..அதுக்கும் சிரிச்சவரு..அதெல்லாம் என் அப்பன் பாத்துப்பான் நீ ஒரு தகப்பனா பண்ண வேண்டிய விஷயங்கள உன்கிட்ட சொல்லிட்டு போலாம்நு வந்தேன்னு சொன்னார்..ஏனோ அவர எதிர்த்து பேச தோணவேயில்ல..சொல்லுங்க ஐயாநு சொல்லி அவரு பக்கத்துல உக்காந்தேன்..என்னென்னவோ சொன்னாரு ஆனா எல்லாமே நல்லபடியாதான் இருந்தது..

சேகரா உன் பொண்ணு என் தாய் மஹாலட்சுமியோட பூரண அருள் பெற்றவ அவளால உனக்கும் உன் குடும்பத்துக்கும் ஒரு குறையும் வராது..இப்போ நீ இருக்குற நிலைமையிலிருந்து பலமடங்கு முன்னேறி புகழ் செல்வாக்கோட இருப்ப..ஆனா உன் பொண்ணோட கல்யாணம் மட்டும் அவ விருப்பப்படிதான் நடக்கும் நடக்கனும் இதை இப்போவே உனக்கு தெரியபடுத்தனும்ங்கிறது விதி..அவளின் தேர்வு யாராக இருக்கிறானோ அவன்தான் உன் மருமகன் அதில் மாற்றம் ஏதுமில்லை..அதை மாற்றவும் நினைக்காதே..என் தாயை நான் ஒருமுறை பார்த்துவிட்டு கிளம்புகிறேன் அழைத்து வருகிறாயா??

மறுபேச்சு பேசாமல் சஹானாவ எடுத்துட்டு வந்து அவரு கைல குடுத்தேன்..அவரு முகத்துல அப்படி ஒரு சந்தோஷம் அவள பாத்தவுடனே..அவ காதுல ஏதோ பேசினார்..நிறைவா ஒரு பார்வை பாத்துட்டு அவள என் கைல குடுத்துட்டு கிளம்பிட்டார்..

எனக்கு என்ன பண்றதுண்ணே தெரில என் மனைவிட்ட இத கொஞ்ச நாள் கழிச்சு தான் சொன்னேன் ஆனா அவ பெருசா எடுத்துக்கல நம்ம பொண்ணுக்கு கடவுள் அருள் இருக்குநு நினைச்சு சந்தோஷப்படுங்க அதவிட்டுட்டு ஏன் கண்டத நினைச்சு குழப்பிக்குறீங்கநு சொன்னா..எனக்கும் நா தான் ரொம்ப யோசிக்கிறேனோனு தோணிச்சு..காலப்போக்குல நா அத மறந்தும் போய்ட்டேன்..ஆனா சஹானா உங்கள விரும்பினதா வந்து சொன்ன அன்னைக்கு ரொம்ப யோசிச்சேன்..நீங்க நல்லவருதான் இருந்தாலும் ரெண்டு பேமிலிக்கும் செட் ஆகுமா என்ன பண்றதுநு கொஞ்சம் நெகெட்டிவ் தாட்ஸ் இருந்துட்டே இருந்தது..சொன்னா நம்ப மாட்டீங்க அன்னைக்கு நைட் சொல்லி வச்சாமாறி சஹானாவோட குழந்தை முகமே கனவுல வந்துட்டு இருந்தது..காலைல எழுந்து கொஞ்ச நேரத்துக்கு ஒண்ணும் புரில அப்பறம் நேரம் ஆக ஆகதான் அவளோட சின்ன வயசுல நடந்ததெல்லாம் நினைச்சு பாக்குறப்போ சட்டுனு அந்த சாமியார் சொன்னது நியாபகம் வந்தது..ஒரு செகண்ட் புல்லரிச்சு போச்சு..இதுக்கு மேல இதுல நா முடிவு பண்ண ஒண்ணுமில்லைனு உங்ககிட்ட சம்மதம் சொல்லிட்டேன் அன்னைக்கே இந்த விஷயத்தையும் சொல்லலாம்நு தான் இருந்தேன் சரி வீணா உங்களை குழப்ப வேண்டாம்நு விட்டுட்டேன்..தப்பா எடுத்துக்காதப்பா கார்த்திக்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.