(Reading time: 16 - 31 minutes)

ரு கைகளையும் தூக்கி அவள் முன் வளைந்து சரண்டர் என செய்கைகாட்ட அது என அவளும் இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டாள்..

ஹே ஏன்னே தெரில எனக்கு உன்ன வாங்க போங்கநு கூப்பிட வரவே மாட்டேங்குது என்ன பண்றது நானும் வீட்ல ப்ராக்ட்ஸ்லா பண்ணி பாக்குறேன் பட் உன்கிட்ட பேசினாலே கார்த்திக்நு கூப்டதான் வருது என்ன பண்றது??என பாவமாய் கேட்க..

சஹி உனக்கு எப்படி கூப்ட பிடிச்சுருக்கோ அப்படி கூப்பிடு கஷ்டப்பட்டுலா நீ மாத்திக்க வேணாம்..வாடா போடாநு கூப்பிடாம இருந்தா சரி அதுவும் அப்பா அம்மா முன்னாடி நமக்குள்ள நோ பார்மாலிட்டீஸ்..என்ன புரியுதா என தலையசைத்து அவன் கேட்க கார்த்திக் அங்க பாரேன் என அவள் கூற சட்டென திரும்பியவனின் கன்னத்தில் இதழ்பதித்து ஓடிவிட்டாள்..ஒரு நொடி அக்கம்பக்கம் பார்த்தவன் யாருமில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டுநிம்மதிப் பெருமூச்சு விட்டவாறே அவளை பின்தொடர்ந்தான்..

அவர்களிருவரும் வருவதற்குள் சிவா ஷரவந்தியை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றிருக்க பெரியவர்கள் நால்வரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்..தன்னவளை கண்களால் அளந்தவாறே தன் அன்னையிடம் கிளம்பலாமா மா??

போலாம்ப்பா..சம்மந்தி குலதெய்வ பூஜை பத்தி சொன்னாரு அடுத்தவாரத்துல நாள் எதுவும் நல்லாயில்ல அதனால அதுக்கடுத்த வாரம் போய்ட்டு வந்துருவோம்..

ம்ம் சரிப்பா அப்படியே பண்ணிரலாம்..சரி நீங்க எல்லாரும் கிளம்புங்க நானும் சஹானாவும் இன்விடேஷன் டிசைன் பாத்துட்டு வந்துரோம்..நானே கொண்டு வந்து விட்டுறேன் மாமா சீக்கிரம் வந்துருவோம்..சஹானா ஆச்சரியமாய் பார்க்க பெரியவர்கள் தங்களுக்குள் சிரித்தவாறே அவர்களை அனுப்பி வைத்தனர்..

ஹாய் மக்களே ஷாப்பிங்லா ஒரு வழியா முடிச்சாச்சு..அடுத்து என்னனு பொறுத்திருந்து பார்ப்போம்..

தொடரும்

Ninnai saranadainthen - 09

Ninnai saranadainthen - 11

{kunena_discuss:1097}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.