(Reading time: 12 - 23 minutes)

றுபடியும் அவளை பார்க்க கிடைக்காத அந்த வெறுமையான நாட்களா? கேள்வி கேட்ட உள்ளத்தின் வருத்தங்களை அப்படியே வெளிக்காட்டாமல் அடக்கினான். அதில் தான் அவன் தேர்ச்சி பெற்றவனாயிற்றே? அத்தானின் கிண்டல்களுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருக்க, தம்பியை சீண்டும் கணவனை அதட்டி விட்டு அவனது முகமாற்றம் குறித்து விசாரித்துச் சென்றாள் ஜாக்குலின். எப்படித்தான் அக்காவிற்கு எல்லாம் புரிகின்றதோ? திருமணமாகி இவ்வளவு வருடங்களானாலும் தன் மேல் அவள் கொண்டுள்ள தனிப்பட்ட கவனம் குறித்து நெகிழ்ந்தான்.

இரவும் வந்தது, வெகு நாளைக்கு பின்னர் தன்னுடைய அறைக்கு தூங்கச் செல்லுகின்றான் ரூபன். நிச்சயதார்த்தம் நடைப் பெற்ற ஹாலிலிருந்தே ரூபனை கவனித்துக் கொண்டிருந்த ஜீவன் ,

“இன்னிக்கு மட்டும் நான் உன் கூட படுக்க வர்றதா இல்லை, என்னோட கற்பை நான் காப்பாத்திக்கிறேன்” என்று அண்ணனை கிண்டலடித்தவனாக அவன் முறைப்பை பொருட்படுத்தாமல் அம்மா , அக்காவோடு கதை பேச அவனது அறைக்குள் சென்று விட்டான்.

பிரின்ஸிம் தன் அப்பாவோடு ஹாலில் சோஃபா கம் பெட்டை விரித்து தூங்கி விடவே தன்னந்தனியனாக தன் அறைக்குச் செல்லவே வெறுப்பாக இருந்தது ரூபனுக்கு. யாராவது கூடவே இருந்தாலாவது நன்றாக இருக்கும் என்றெண்ணியவனுக்கு அவனது அறை அவனது அறை போலல்லாமல் அனிக்காவின் அறை போலவே தோன்றலாயிற்று.

எங்கு பார்த்தாலும் அவள் பிம்பம். மோதிரம் மாற்றுகையில் அவள் தன்னை பார்த்த பாவம், அந்த கண்களில் இருந்த நேசம், தனக்கேயான அவள் வெட்கம் ஒவ்வொன்றாக அவன் மனதில் நிழலாடியது. எவ்வளவு அழகு என்னவள் எண்ணியவன் நெஞ்சம் பெருமூச்சால் ஒரு முறை விம்மி தணிந்தது. இப்போதே அவளுடன் பேச வேண்டுமென மனம் விழைந்தது.

எத்தனை நாட்கள் வலிய பேச வந்திருப்பாள்? அப்போதெல்லாம் பாராமுகமாய் இருந்து விட்டு இப்போதென்னவாம்? நேரமறியாமல் மனம் அவனை குத்திக் காட்டியது

அவளது வீட்டிற்கு போய் இப்போதே அழைத்து வந்து விடலாமா? இதுவரை தன் போக்கில் அவள் வீட்டினரை ஆட்டி வைத்த ஆண் எனும் ஆணவம் சற்றே தலை தூக்க தன்னையே பிரயத்தனப்பட்டு தட்டி அடக்கினான்.

இந்த சினிமாவில் காட்டுவது போல பின்பக்கமாக சுவரேறி அவளறையில் குதிக்கலாமா? சாத்தானாய் மனம் ஆலோசிக்க, அடச் சீ இப்போது நீ வாசல் வழியாகவே போகலாம். எதற்கு இப்படி சில்லறை ஐடியாவெல்லாம் என தலையிலடித்துக் கொண்டது அவன் மனது. அதன் பின்னர் அவன் உள்ளத்துச் சாத்தான் சென்றவிடம் தெரியவில்லை.

நாளைக்கு ஃபேக்டரியில் நிறைய வேலை இருக்கிறது சீக்கிரம் தூங்க வேண்டும்......... தன்னைக் கடிந்துக் கொண்டான் ஆனால், அதற்கு பலனேதும் இல்லை. அரை மணி நேரம் ஒரு மணி நேரமாகி விட படுக்கையில் உருண்டு புரண்டும், களைப்பாக இருந்த போதும், உடல் ஓய்விற்கு கெஞ்சிய போதும், கண்கள் களைப்பில் எரிந்த போதும் அவனுக்கு தூக்கம் வரவேயில்லை.

தான் தன் கட்டுப்பாட்டில் இல்லாத நிலை அவனுக்கு மிகுதியாக எரிச்சலை வரவழைக்க, அவனுக்கு எழுந்த கோபத்தில் கைக்கு அகப்பட்ட ஒவ்வொன்றாக வீசி எறிய எண்ணியவனாக தலையணையை எடுத்து எறியப் போக அதன் கீழே படபடத்தது அந்த மடிக்கப் பட்ட பிங்க் நிற அழகிய பூக்கள் இறைந்துக் கிடந்த தாள் ஒன்று.

அத்தான் எனும் வார்த்தைக்கு அருகில் பெரியதாக ஸ்மைலி ஒன்று அவனைப் பார்த்து புன்னகைக்க தாகத்தில் தவித்தவனுக்கு சுனை ஒன்று காணக் கிடைத்தது போல புதையலாக எண்ணி அதைக் கைப்பற்றினான்.

மறுபடியும் , மறுபடியும் அதை வாசித்தவன் ஒவ்வொரு முறையும் கணக்கற்ற முத்தங்களை அக்கடிதத்திற்கு பரிசளிக்க, கண்கள் தூக்க மயக்கத்தில் சொக்கும் வரை அதைப் படித்தவன் தன் இதயத்திற்கு நெருக்கமாக அதை வைத்தவனாக, அணைத்துக் கொண்டு நிம்மதியாக தூங்கினான்.

அவளது கடிதம்

அவளது பிரதி பிம்பமாய்

 

கடிதத்தின்

வார்த்தை ஒன்றிலும்

அவளது அன்பு

 

கடிதத்தில் எனை அழைக்கும்

விளிப்பில் தெரிக்கும் - அவள்

நேசத்தின் வாசம்

 

தாகத்தில் தவித்தேன்

அவளுரு காண

 

பேசவே துடித்தேன்

அவள் குரல் கேட்க

 

தவித்தே இருந்தேன் - அவள்

மதி முகம் பார்த்து

ஆயிரம் முத்தங்கள் பதிக்க

 

அவளது கடிதம்

அவளது பிரதி பிம்பமாய் காணவும்

 

ஆறுதல் அடைந்தேன்.

அவள் வார்த்தை ஒவ்வொன்றிலும்

அமைதியும் கொண்டேன்.

தொடரும்

Episode # 31

Episode # 33

{kunena_discuss:970}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.