மீண்டும் சிரித்தாள்.
“நீ பைத்தியம் மாதிரி சிரிச்சுக்கிட்டேயிரு. நான் போய் குளிச்சுட்டு சாப்பிடறேன்.”
அவள் குளியல் அறைக்கு செல்ல பின்னேயிருந்து மஞ்சரி பயமுறுத்தினாள்.
“ஏய்! டக்குன்னு உள்ளே நுழைஞ்சுடாதே. உள்ளே கெஸ்ட்டெல்லாம் இருப்பாங்க.”
“என்னது கெஸ்ட்டா? அப்படி யாரு இருப்பாங்க?”
“யாருன்னு கேட்கக் கூடாது. எதுன்னு கேட்கனும்.”
“எது?”
பயத்துடனே கேட்டாள்.
“வேறெது? பாம்பு, பூரான், தேள்னு இவங்கதான். முக்கியமா பாம்பார்தான் அடிக்கடி விஜயம் செய்வார்.”
“என்னது பா...பா...பாம்பா?”
“என்னடி பாம்புக்கு இனிசியல் எல்லாம் சொல்றே? உனக்கு எப்படி தெரியும்?”
அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.
“நீ பொய்தானே சொல்றே?”
“பொய்யெல்லாம
...
This story is now available on Chillzee KiMo.
...
உள்ள சாதத்தை பிசைந்து உருண்டையாகப் பிடித்த போது நேசமலர் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்தாள்.
மல்லிகாவை நோக்கி கையை நீட்டினாள்.
முதலில் திகைத்தாலும் அவள் எதற்காக கை நீட்டுகிறாள் என்று புரிந்து தான் உருட்டிய உருண்டை சாதத்தை அவளது கையில் வைத்தாள்.
“ஏய்! என்னடி பண்றே?...”