மேலும் பேசப் போனவளை தன் கண்ணசைவால் தடுத்து நிறுத்திய மல்லிகா அவளைப் பார்க்குமாறு ஜாடை காட்டினாள்.
அங்கே கண்கள் கலங்க அந்த உருண்டையை பரவசத்துடன் தன் வாயில் வைத்தாள் நேசமலர்.
மல்லிகாவைக் கண்டதும் அவளுக்குத் தன் தாயுடன் கழித்த அந்த சந்தோசமான நாட்கள் நினைவு வந்துவிட்டன.
“அம்மா எனக்கும்.”
என்று அக்கா தங்கை இருவருமே அவளிடம் கை நீட்டினர்.
“எப்போதுமே அம்மா கையால் உருட்டி சாப்பிட எனக்கு ரொம்ப பிடிக்கும். நீ வந்திருக்கியே. இதைப் பார்த்தா சின்னப்பிள்ளைன்னு கிண்டல் செய்வாயேன்னுதான் நல்ல பிள்ளை மாதிரி நடந்துக்கிட்டேன். இப்ப நீயே இதை செஞ்ச பிறகு நான் ஏன் தயங்கனும்?”
அவள் செய்தது சாதாரண செயலே என்ற மாதிரியிருந்த அவளது பேச்சு நேசமலரின் தயக்கத்தைப் போக்கியது.
மல்லிகா மகிழ்வுடனே
...
This story is now available on Chillzee KiMo.
...
என்று அடைக்கலமானவளை தன் நட்புக்கரம் நீட்டி அவள் துயரத்தை தன்னை அறியாமலே குறைத்தவள் மஞ்சரி.
வெளியில் சென்று மஞ்சரி அவள்தான் பணம் கொடுத்தாள் என்ற உண்மையை சொல்லியிருக்க வேண்டும்.
கண்ணீருடன் அந்த குடும்பமே அவளைக் கும்பிட்டது.
“அம்மா! என்ன இது? நீங்க போய் இப்படி செய்யலாமா?”