(Reading time: 17 - 33 minutes)

மஹிந்தன், “தூங்கு பேபி” என்று கூறியபடி அவளை சேர்த்து அணைத்தபடி தூங்கிப்போனான்.

அவனின் அணைப்பில் இருந்து விடுபட முயன்றால் நேற்று போல் அவனின் அணைப்பு இறுகிக்கொண்டே போகுமோ என்ற பயத்தில் அசையாமல் படுத்து இருந்தாள்.

அவனின் கைவளைவில் இருப்பது அவளின் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்தது.தூக்கத்திலும் அவளை விடாமல் அணைத்துக்கொண்டு தூங்கிய மகிந்தனைப் பார்த்தவள், “பிடிவாதக்காரன்” என்று நினைத்தபடி அவன் உண்மையாகவே தூங்குகிரானா? அல்லது தூங்குவதுபோல் அலும்பு பண்ணுகிறானா? என்று அவன் முகத்தை பார்த்தாள்

ஆண்மை நிறைந்த அவன் முகத்தில் தூக்கத்திலும் பிடிவாதம் தெரிந்தது. அவனின் முகவடிவு அவள் ரசிக்கும் படி அழகாக இருந்து தொலைத்தது. அவன் அணைப்பில் அவன் முகம் பார்த்துப் படுத்திருந்தவளுக்கு அவனை முத்தமிடும் ஆசை வந்ததில் அரண்டு போனாள். எனவே கண்களை மூடி அவன் முகம் பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்தாள் ஆனால் அவனின் அணைப்பில் அவள் உடல் இலகிபதிலுக்கு அவள் கைகளும் அவனை அனைத்துக் கொள்ள தூண்டுவதை அறிந்தவளுக்கு வெட்கமும் நடுக்கமும் ஏற்ப்பட்டது.

அவள் அசைந்ததும் மஹிந்தன் தூக்கக் கலக்கத்துடன் ச்சு...தூங்கு “சும்மா அசைந்து அசைந்து உசுப்பேற்றாதே” என்று கூறியவன் மேலும் அவளை தன்னுடன் இருக்கி அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டவன் தூங்கிவிட்டான்.

அவன் அசைந்து உசுப்பெற்றாதே என்று கூறவும் அசைய பயந்து அப்படியே படுத்தவள் தன்னையும் அறியாமல் உறங்கிவிட்டாள்

காலை கண்விழித்த மஹிந்தன் தன் மார்பில் முகம் புதைத்து தூங்கிக் கொண்டிருந்த ழையாவைப் பார்த்ததும் அவனுக்குள் அவளை ஆளும் ஆசை அதிகமானது

அவளுக்கு தன் அருகாமை பழகவேண்டும் தன் தொடுகையை அவள் இயல்பாக ஏற்றுக் கொள்ள பழக்கவேண்டும், என்று தான் அவளை நேற்றும் அணைத்தபடி தூங்க முயன்றான்.

ஆனால், தன் மனதுக்குப் பிடித்த காதலியை கைவளைவில் சும்மா வைத்துக்கொண்டு அவன் தூங்குவதுபோல் பாவனை செய்வதற்கு அவன் பட்டப்பாட்டை நினைத்துச் சிரித்தவன், தன் மார்பினில் முகம் புதைத்து தூங்கும் தன் மனைவியின் வளைவுகளும் மென்மையான அவளின் மேனி ஸ்பரிசமும் அவனை பித்தம் கொள்ள வைத்தது.

ழையாவின் முகத்தை தன் மார்பினில் இருந்து பிரித்து அவள் முகவடிவை தன் விரல்களால் வரைந்தான்.

அதில் கண்விழித்து ழையா பார்த்ததும் அவள் தாடையை விரல்களால் பற்றியவன் அவள் முகம் நோக்கிக் குனிந்தான் அவன் கையில் இருந்து தன் முகத்தை திருப்பிக்கொள்ளபார்த்தவளின் முயற்சி வெற்றி பெறுவதற்கு முன், அவளின் இதழில் அழுத்த முத்தமிட்டவன் உடலில் நடந்த மின்சாரதாக்குதலின் பதிலை அவளுக்குள் பாயும்படியாக ஆக்கிரமிக்க ஆரம்பித்தான்

ஏற்கனவே மனதும் உடலும் பலமிழந்து இருந்த ழையாவின் பலவீனமான மறுப்பை, எளிதாக முறியடித்தவன் மேலும் முன்னேறி அவளுள் கலந்தான்.

மஹிந்தன் விலகிப் படுத்ததும் எழுந்து குளிக்கச்சென்றவளுக்கு தோற்றுவிட்ட வலி உண்டானது.

குளித்துவிட்டு வந்தவள் தன் தலையில் சுற்றியிருந்த துண்டை எடுத்து தன் மார்பிள் விழுந்த முடியை தூக்கி பின்னால் போடும்போது அவளின் பின்னால் வந்த மஹிந்தனின் முகத்தில் முடியின் ஈரம் தெரித்தது

ஸ்......என்று அதன் குளிர்ச்சியை அனுபவித்து சப்தமெழுப்பியவன் அவளுக்கு பின்னால் நின்று கொண்டு வாசமாக இருகிறாய் ழையா என்றவன், பின்னால் இருந்து அவளை அணைத்தபடி இன்று என் மாமும் டாடியும் உன் அம்மா வீட்டிற்கு போய் நம் கல்யாண ரிசப்சனை நடத்த கலந்து பேசப் போகிறார்கள்.

அதனை நான் வருனிடம் தெரிவித்தேன். அப்போ, உன் அம்மா நம் இருவரையும் அங்கு சாப்பிட வரச் சொன்னார்கள் என்றவன், எனக்கு வெளியே போகவே இஷ்டமில்லை. இப்படியே உன்னை என் கை வலைவிலேயே வைத்திருக்கனும் போல் உள்ளது பேபி. பட், கூப்பிட்டிருப்பது உன் அம்மா. “சோ”! போகாமல் இருக்க முடியாது என்றவன், த்ரீ போர்த் பாக்கெட்டினுள் கைவிட்டு ஓர் நெக்லஸ் எடுத்து அவள் கழுத்தினில் பின்னால் நின்றபடி போட்டுவிட்டான்.

பின் ழையா நான் உனக்கு இதை இதற்கு முன் ஒருதடவை போட்டுவிட்டேன் ஞாபகம் இருக்கிறதா? என்றவன், ட்ரெஸ்ஸிங் டேபிளின் அருகில் வைத்திருந்த புடவையையும் காண்பித்தான்.

அதை பார்த்ததும் கவிலையாவின் கண்களில் நீர் கோர்த்தது. அவன் கவிழையாவை ஏமாற்றி ரெஜிஸ்டர் ஆபீஸ் போகும் போது உடுத்தியிருந்த புடவையும் நெக்லசும் தான் அது.

நீங்கள் நினைத்தது போல் என்னை அடிபணிய வைத்துவிட்டீர்களே.. என்னிடம் ஆபீசில் முதல் நாள் நீங்கள் என்ன சொன்னீர்கள் ஞாபகம் இருக்கிறதா....?என்றாள் ழையா.

அவள் அப்படி கூறியதும் மஹிந்தனின் மனம் வலித்தது. அவன் அந்த பேச்சு இப்பொழுது எதற்கு பேபி, என்று பேச்சை திசை திருப்பப் பார்த்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.