ஆனால் ழையா தொடர்ந்து பேசிக்கொண்டே போனாள். அன்று நீங்கள் என்ன சொன்னீர்கள், எனக்கு தனியே வீடு, பணம், நகை எல்லாம் வாங்கி கொடுக்கிறேன் நான் உங்களுக்கு கீப்பாக இருக்கும்....என்று சொல்லிக்கொண்டு போனவளின் வாயை தன் கைகளால் மூடினான் வேண்டாம் பேபி, நான் அப்படி உன்னை பேசியிருக்கக் கூடாது. ப்ளீஸ்... ழையா, அதை மறந்துவிடு என்று இறைஞ்சினான்.
அவன் அவள் பின் நின்று இதை நான் பார்த்துப் பார்த்து உனக்காக முதல் முதலாக வாங்கியது. உனக்கு ஒன்று தெரியுமா? நான் இதுவரை என் தங்கை மாதுரிக்கும் என் அம்மாவிற்கும் கூட நகை உடை என்று வாங்கி கொடுத்ததில்லை. என் தங்கை எதுவும் ஆசைப் பட்டு கேட்டால் நான் என் கார்டை கையில் கொடுத்து உனக்குத் தேவையானதை வாங்கிக்ககொள் ஆனால் என்னை கூட பர்சேஸ் வரச்சொல்லி கூபிடாதே, எனக்கு பெண்கள் உபயோகப்படுத்தும் பொருட்கள் பற்றித்தெரியாது என்று சொல்லிவிடுவேன்.
ஆனால், நான் பார்த்த ஓர் விளம்பரம் என்னை மிகவும் கவர்ந்தது அதில் நாயகியின் கண்களில் பிரதிபலிக்கும் காதலையும் நாயகனின் மயங்கும் நிலையையும் பார்த்த எனக்கு அந்த இடத்தில் அது நீயும் நானுமாக இருப்பது போல் தோன்றியது. சோ, அதேபோல் காதலை உன்கண்கள் அதே போன்ற காஸ்டுயூமில் என்னிடம் காண்பிக்கவேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. எனவே நானே நம் இருவருக்கும் தேடி வாங்கிய உடைதான் இது.
ஆனால் இதை நீ போட்டும், அன்று என்னால் மகிழமுடியாதவாறு உன் மனநிலையிருந்தது. நான் ஆசைப்பட்டபடி உடையை மட்டும் தான் என்னால் உன்னை போடவைக்கமுடிந்தது. இந்த கண்களில் நான் எதிர்பார்த்த காதலை என்னால் பிரதிபலிக்க வைக்க முடியவில்லை என்று வேதனையுடன் கூறியவன், என்னுடன் வா பேபி... என்று அவளை அங்கிருந்த ஓர் அறைக்கு கூட்டிச்சென்றான்.
அந்த அறை சுவர்களில் அவளின் ஓவியங்கள் மாட்டப்பட்டுயிருந்தது நடுவில் தூரிகைபலகையும் வண்ணங்களும் இருந்தது.
எனக்கு உன்மேல் உள்ள ஈர்ப்ப்பை இந்த இடத்தில் தான் நான் தெரிந்து கொண்டேன் எனக்கு டென்சன் ஏற்பட்டால் அதை குறைக்க ஓவியம் வரைவேன். ஆனால் என்று உன்னை முதல் முதலில் பார்த்தேனோ என்று கூறியவன் கரும் பச்சைநிற சாலில் கண்கள் மட்டும் தெரியும்படி அவள் ஸ்கூட்டியில் உட்கார்ந்துகொண்டு இருந்த ஓவியத்தை காட்டி அன்று முதல் எனக்கு உன் உருவம் தவிர வேறொன்றும் வரைய முடியவில்லை.
அதில் இருந்து தான் உன் உருவம் எந்த அளவில் என் மனதில் பதிந்துள்ளது என்பதனை தெரிந்து கொண்டேன்.உன்மேல் எனக்கிருந்த பிடிப்பை பார்த்து என் மேல் எனக்கே கோபம் வந்தது. அதனை முழுவதுவும் உன்மேல் வெறுப்பாக காண்பிக்க முயன்றேன். ஆனால்.. அதன் பின் தான் தினமும் உன்னை ஓவியமாக் தீட்டும் வெறி எனக்கு ஏற்ப்பட்டது. அவ்வாறு வரைந்து முடித்தபின் வரும் உன் முகமும் அதில் என்னை காதலாய் நீ பார்க்கும் படியான உன் கண்களும் எனக்கு அமைதியை தரும்.
நீ என்னுடையவள் அதேபோல் நான் உன்னுடையவன் உனக்கு மட்டுமே சொந்தமானவன். உன்னுடையது என்னுடையது. எல்லாமே இனி நம்முடையது பேபி.உன்னை நான் கேவலமாக் பேசினால் அது என்னையே அசிங்கப் படுத்துவது போன்றது. ஓகே இனி இந்த நெக்லசையும் உடையும் நீ என்னை முழு மனதார எப்பொழுது ஏற்றுக் கொள்கிறாயோ? அன்று போட்டு என் முன்னாள் வா.... அதன் பிறகுதான் இனி உன்னை தொடுவேன் என்றவன், ஓகே பேபி அதற்காக உன் கையை கூட பிடிக்க கூடாது என்றெல்லாம் சொல்லக் கூடாது. ஏனெனில், உன் கைபிடித்த கணவன் நான் என்று கூறிவிட்டு கண்ணடித்துவிட்டு அகன்றான்.
இவ்வளவு நேரம் சீரியசாக பேசியவன் செய்த அலப்பரையைப் பார்த்ததும், உங்களை..... என்று பக்கத்தில் இருந்த மூங்கில் சேரில் இருந்த குசனை எடுத்து கோபம் போல் அவன் மேல் எறிந்ததும் அதை கேட்ச் பிடித்தவன் சிரித்தபடி அந்த இடத்ததை விட்டு அகன்றவன் மனம் கணத்தது. சீக்கிரம் அவளின் மனதில் நான் ஏற்படுத்திய காயம் ஆறவேண்டும் என்ற ஏக்கப் பெருமூச்சு எழுந்தது.
ழையாவிற்கு அவனின் மேல் பரிதாபம் ஏற்பட்டது.பிறந்ததில் இருந்து தான் நினைத்த எல்லாவற்றையும் பணத்தின் மூலம் அடைந்த அவனுக்கு அன்பை பணத்தின் மூலம் வாங்கமுடியாது என்பது புரியாமல் போனது ஏன்? என்ற கேள்வி உண்டானது.
பார்வதி பிள்ளைகளுக்கு அடக்கத்தை கற்று கொடுத்து வளர்த்திருந்தாள். இருப்பதை கொண்டு சமூகத்தில் சிறப்பாக வாழ கற்றுக்கொடுத்திருந்தாள்.
எனவே, மஹிந்தனின் இந்த இயல்பு, அவளுக்கு பெறும் நெருடலாய் இருந்தது. அவன் தன் அருகில் இருக்கும் நேரம் அவன் பால் சாயும் மனது அவனை காணாதபோது, அவன் முன்பு தன்னிடம் நடந்துகொண்டவிதம் நினைவிலாடி அவனின் மேல் ஏற்பட்ட மயக்கம் விலகி அவனை வெறுக்கும் படி செய்தது.
என் விருப்பமும் அவனாக என் வெறுப்பும் அவனாக மாறி மாறி என்னை கொல்கிறானே என்று அவனைப் பற்றியே மனதில் அசை போட்டுக்கொண்டு, கண்ணுக்கு மைதீட்டி கொண்டிருக்கும் போது கிளம்பி வந்த மஹிந்தன் தான் வந்ததை கூட உணராமல் இருந்தவளை, இன்ச் இன்ச் ஆக ரசித்தபடி அவளின் கூந்தலை அருகில் வந்து தடவியதும் சுயநினைவிற்கு வந்தவள் அனிச்சை செயலாக அவனிடம் இருந்து விலகி எழுந்தாள்.