"அதுக்காக ஸ்ட்ரைன் பண்ணுவியா?"-என்றப்படி அவளருகே வந்தான்.
"இப்போ எதுக்கு சக்கரை?"-என்றப்படி அந்தப் பாத்திரத்தை எடுத்து தந்தான்.
"உங்களுக்கு டீ போட தான்!"
"நான் டீ கேட்டேனா?எந்த வேலையும் செய்யாதேன்னு அம்மா சொன்னாங்க-ல!"
"அதுக்கு எவ்வளவு நேரம் தான் சும்மா உட்கார்ந்திருக்கிறது!"
"உன்னை யாரு சும்மா உட்கார சொன்னா?நல்லா தூங்கு,புக்ஸ் படி,நல்லா சாப்பிடு,டி.வி.பாரு,சாங்க்ஸ் கேளு,அம்மாக் கூட பேசிட்டு இரு,நான் வீட்டில இருந்தா என் கூட ரொமான்ஸ் பண்ணு...எவ்வளவு வேலை இருக்கு!"
"இதெல்லாம் வேலையா?என்னை சோம்பேறியாக்கி விட்டுவிடுவீங்க போல!"-அவன் அவளது தோள்களைப் பற்றி நாற்காலியில் அமர வைத்தான்.
"இங்கே பாரு!இதுக்கு முன்னாடி நீ மட்டும் தான்!இப்போ பாப்பாவும் இருக்கால்ல!அவளையும் நீதானே சுமக்கணும்,அதனால தான் எந்த டென்ஷனும் உனக்கு கொடுக்கிறதில்லை."-என்றவன்,அவளது வயிற்றில் கை வைத்து!!
"பாரும்மா செல்லம்!அம்மாக்கு பொறுப்பே இல்லை!"என்றான்.
"அதான் பொறுப்பா பார்த்துக்க அப்பா இருக்காரே!அம்மா ஏன் பொறுப்பா இருக்கணும்னு கேளு செல்லம்!"-என்றாள் புன்னகைத்தப்படி!
"ஓய்!என்ன எனக்கே எதிர்முனையா?என் பொண்ணு எனக்கு தான் சர்ப்போர்ட் பண்ணுவா!"
"ஃபார் யுவர் கயின்ட்லி நோட்டீஸ் டாக்டர் சார்!உள்ளே இருக்கிறது பையன்!"
"பொண்ணு!"
"பையன்!"
"பொண்ணு!"
"சரி...இரண்டுப் பேருக்கும் வேணாம்!ஒரு பையன்,ஒரு பொண்ணு!"
"ம்..டபுள் ஓ.கே.!"-அவள் மனம் முழுதும் நாணம் படர,அதனை மறைக்க,தன் மனையாளனை அணைத்துக் கொண்டாள் கீதா.
வரண்டு கிடந்த பாலைநிலமாய் திகழ்ந்த மனதுள் இருவரின் காதலும் மழைச்சாரலாய் உருமாறி பொழிந்துக் கொண்டிருந்தது.
முற்றும்!
{kunena_discuss:1070}