(Reading time: 9 - 17 minutes)

“குமார் கேஸ் கையில எடுத்தப்பவே, அவன் யார் யாரோட லிங்க்ல இருக்கான்னு தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன்… முதல்ல பைரவ், இரண்டாவது திவாகர்… அதுக்கு அடுத்து இவங்களை உருவாக்கி, அவங்க கிட்ட முக்கியமான சில நாச வேலைக்கான பொறுப்பை ஒப்படைச்ச நீங்க….”

“டேய்…” அவர் பயத்துடன் கோபமாய் கத்த,

“உங்க கத்தல் கூட பயத்துல தான் வெளிவருது… கவலைப்படாதீங்க… நாளைக்கு பேசுறதுக்கு வார்த்தை கூட வெளிவராது…”

“என்னடா செய்வ?... அரெஸ்ட் செய்வீயா?.... என்னை அரெஸ்ட் பண்ணிடுவீயாடா நீ?...”

“அது தான் உங்க ஆசைன்னா, அதை ஏன் நான் செய்யாம போகணும்?... சொல்லுங்க….”

“டேய்… யாரோட ஆசையை யார் நிறைவேத்துறான்னு நீ தெரிஞ்சிக்கப்போற நாள் அதிகம் இல்லடா….”

சொல்லிவிட்டு திரும்பியவர், இஷானை ஓர் பார்வை பார்த்துவிட்டு வேகமாக அங்கிருந்து அகல, இஷான் சட்டென ஜெய்யின் அருகே வந்தான்…

“மச்சான்… நீ சொல்லிட்டிருந்த முக்கிய குற்றவாளி மினிஸ்டர் தானா?...”

இஷான் பரபரப்புடன் கேட்க, ஜெய் புன்னகையுடன் ஆம் என கூற,

“ஓஹூ………………” என சந்தோஷக் கூக்குரலுடன், ஜெய்யைக் கட்டிக்கொண்டான் இஷான்…

பின் தாங்கள் இருக்கும் இடம் அறிந்து இஷான் அமைதியாக, கலெக்டரும் தன் ஆதரவை அவர்களுக்கு தெரிவித்துவிட்டு செல்ல, சோமநாதனும் பாராட்டினார் ஜெய்யை, மினிஸ்டர் தான் அனைத்திற்கும் காரணம் என்பதை அறிந்து…

வெளியே வந்த மினிஸ்டர் யாருக்கோ போன் செய்து சற்றே காட்டமாக பேச, மறுமுனையில் என்ன பதில் வந்ததோ அவரின் முகம் சற்று தெளிவானது… கூடவே சிரிப்பும் எட்டிப்பார்த்தது உடனேயே…

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்…

எப்படி இருக்கு இந்த வீக் அப்டேட்?...

படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்…

மீண்டும் அடுத்த வார மருவக் காதல் கொண்டேனில் சந்திக்கலாம்…

தொடரும்...!

Episode 50

Episode 52

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.