காலை நேரத்தில் ரேவதி பொதுவாக அவளின் அறையில் இருப்பது வழக்கம்.
அன்றைய செய்தி தாள்களை படிப்பது, டிவியில் ஏதேனும் பார்ப்பது என்று அவளின் நேரம் செல்லும்...
அன்றும் செய்தி தாளை கையில் பிடித்தபடி ஜன்னல் வழியே தெரிந்த மரக்கிளையில் அமர்ந்திருந்த கிளியை அவள் பார்த்துக் கொண்டிருந்த போது, கதவை லேசாக தட்டி விட்டு,
“அத்தை...” என்று அழைத்தப் படி உள்ளே வந்தாள் நந்திதா.
அந்த நேர்த்தில் மருமகளை எதிர்பார்க்கவில்லை என்றாலும், மரம், கிளை, டிவி, பேப்பர் என்று பார்த்து பார்த்து போர் அடித்து போயிருந்த ரேவதிக்கு, சின்ன சிரிப்புடன் கண்ணில் பட்ட மருமகளின் அழகான முகம் மனதிற்கு இதமாகவே இருந்தது.
ஆனாலும் எப்போதும் போல, முகத்தை கல்லாக்கிக் கொண்டு என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
நந்திதா அன்றைய பேச்சை பற்றி பேசியதே ரேவதிக்கு ஆச்சர்யம் தான்...!
ஒருவேளை நந்திதா தன்னை தானே நியாயப் படுத்தி இருந்தால் கூட ரேவதியால் புரிந்துக் கொண்டிருக்க முடியும்...
ஆனால் நந்திதா அவள் செய்ததை புரிந்துக் கொள்ள முடிகிறது என்று சொல்லவும், அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது...