ஒரு சில வினாடிகள் அமைதியில் கரைய...
“சரி அத்தை நான் போறேன்...” என்று சொல்லிவிட்டு எழுந்தாள் நந்திதா...
“ம்ம்ம்....” என்ற ரேவதி, சின்ன தயக்கத்துக்கு பின்,
“என்ன இன்னைக்கு காலையிலேயே கோவிலுக்கு போயிருக்க?” என்றுக் கேட்டாள்.
வழக்கமான ஒன்றிரண்டு வார்த்தை கட்டளையாக அல்லாமல் முதல் முறையாக ரேவதி அவளிடம் நேரடியாக கேள்வி கேட்ட ஆச்சர்யத்தில் விழிகளை விரித்தாள் நந்திதா...!
எப்போதும் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் மருமகள், அப்படி விழிகளை விரிக்கும் போது மேலும் அழகுடன் மிளிர்வதை ரசித்த ரேவதி, உதய் அவளிடம் மயங்கியதில் அதிசயமே இல்லை... என நினைத்துக் கொண்டாள்....
“சும்மா தான் போனேன் அத்தை.... வந்து... அங்கே... துளசியை பார்த்தே
...
This story is now available on Chillzee KiMo.
...
ரயில்வண்டி போல புகை வர அவர்களை பார்த்து கடுப்பாகி கொண்டிருந்தது...
வேறு யார் எல்லாம் உதய் தான்...
நந்திதாவை சமாதானப் படுத்தும் வழிகளை ஆராய்ந்துக் கொண்டிருந்தவனுக்கு அம்மாவும் மனைவியும் சமாதானமாகி விட்டார்கள் என்பது சந்தோஷத்தை கொடுக்காமல் பொறாமையையும், எரிச்சலையுமே கொடுத்தது...