(Reading time: 13 - 26 minutes)

அவரு தேவினு ஒரு பொண்ணை தத்தெடுத்து வளத்ததாகவும் அந்த பொண்ணும் இந்த கோவிலே கதிநு கிடந்ததாகவும் சொல்லுவாக அந்த பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாக போற நேரத்துல இறந்து போச்சாம்..அதுக்கப்பறம் அந்த சாமி கொஞ்சநாள் இந்த கோவில்லயே இருந்ததாகவும் அதுக்கப்பறம் அவரு என்ன ஆனாருனே தெரிலனும் சொல்லுவாங்க..சிலர் அவர் சித்தரா மாறிட்டதா சொல்லுவாங்க..இந்த ஊருக்கோ இந்த கோவிலுக்கோ யார் மூலமாவது எதாவது செய்யனும்னா அவங்ககிட்ட சொல்லுவாராம் அப்படி அவர பாத்தவங்களுக்கே அவரு சித்தர்நு இங்க வந்தப்பறம்தான் தெரிய வந்துருக்கு..இதெல்லாம் எனக்கு என் அம்மை அப்பன் சொன்னது நா அப்போ சின்னபையன் அதுனால அதுக்கு மேல எனக்கு எதுவும் தெரில கண்ணு..

கேட்டிருந்தவனின் கண்கள் கலங்கியிருக்க ஐயா அப்படி அவர நேர்ல பாத்தவங்க யாரையாவது உங்களுக்குத் தெரியுமா???

இல்ல தம்பி அதெல்லாம் தெரில..

ரொம்ப நன்றி தாத்தாஎன்றவாறு கிளம்பியவர்கள் கோவில் குளத்தின் அருகில் நின்றனர்..கார்த்திக் யாரு தேவிகா என்னனு எனக்கு ஒண்ணும் புரீல என்னென்னவோ கேக்குறீங்க என்னாச்சு சொல்லுங்க..

முந்தைய நாளின் அவனது கனவு கோவிலில் சஹானா நடந்து கொண்டதென அவன் அனைத்தையும் கூற நேத்து அந்த கோவில்ல வச்சு ஒரு கதை சொன்னீங்களே அதுக்கப்பறம்தான் இது தோணிச்சு இங்கேயே இருந்தவங்கள விசாரிச்சா தெரிய வருமாநு ட்ரை பண்ணலாமாநு பாத்தேன்சிவா அவன் தோளை அழுந்தப்பற்றினான் கார்த்திக் அப்போ தேவிகா..

ஆமா சிவா என் சஹிதான்..அவளோட முன்ஜென்மத்துல தேவிகாவா பிறந்து என்னை கல்யாணம் பண்ண முடியாம இறந்து போய்ருக்கா..அதனால சஹானாவ மறுபிறவி எடுத்துருக்கா என்றுகூறி முடிக்கும்போது குரல் கம்மிவிட்டது..

கார்த்திக் கம்டவுண் எனக்கு உடம்பெல்லாம் புல்லரிக்குது இப்படியெல்லாம்கூட நடக்குமா..கதைகள்ல மட்டுமே நடக்குற ஒரு விஷயம் நம்ம கண்ணு முன்னாடி..உங்களோட காதல் எந்த அளவு உயர்ந்ததா இருந்திருந்தா இது சாத்தியமாயிருக்கும்..

ஆமா தம்பி நா கூட உங்க ரெண்டு பேரையும் பார்க்கும்போது சஹானாம்மா உங்களுக்காகவே பொருந்தமாறி ஜோடிப் பொருத்தம் அருமையா இருக்கேநு நினைச்சேன் ஆனா உண்மையாவே இது ஜென்ம பந்தம்நு நினைக்கும் போது பேச வார்த்தையே வரல தம்பி..உங்க கல்யாணத்தை ஜாம் ஜாம்நு நடத்துவோம் தம்பி..என கண்கலங்கினார்..ஒருவாறாய் கார்த்திக்கை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஹாலில் ஷரவனும் ஷரவந்தியும் அமர்ந்திருந்தனர்..இவர்களை கண்டதும் ஷரவந்தி ஓடிவந்து கார்த்திக்கிடம் அண்ணா வந்தவுடனே அண்ணி ரூம்குள்ள போய் கதவ பூட்டிக்கிட்டாங்க கூப்டாலும் திறக்க மாட்றாங்க என்ன பண்றதுனே தெரில..

நா பாக்குறேன் ஷரவ் நீ பயப்படாத என்றவன் சஹானா அறைவாசலில் சென்று கதவை தட்டி சஹி கதவத் தொற..என்ற அடுத்த நொடி கதவு திறந்தது..அவன் உள்ளே செல்ல அவனுக்கு முதுகுகாட்டி கட்டிலில் அமர்ந்திருந்தாள்..அவளருகில் சென்று உரசியபடி அமர்ந்தவன்..

சஹி பேபிக்கு என்ன கோபம்..??

போ மாமா என்ன விட்டுட்டு எங்க போன??

 ஹே சிவாவோட வேலை விஷயமா ஒருத்தர பாக்க போனோம் அங்க போய் உன்ன எப்படி கூட்டிட்டு போறது புரிஞ்சுக்கோடீ..

ம்ம் வர வர நீ ஒரு பெர்பெக்ட் ஹஸ்பெண்ட்டா மாறிட்டு வர எனக்கு எப்படி ஐஸ் வைக்கனும்னு நல்லா தெரிஞ்சு வச்சுருக்க என்றாள் உதடு சுழித்து..இன்னுமாய் அவளை நெருங்கி அமர்ந்தவன் ம்ம் நீ இப்படிலா ரியாக்ஷன் குடுத்தா புல் சரண்டர் ஆக வேண்டியதுதான் வேற என்ன சஹி பண்றது??

ம்ம் அதுசரி மாமா நீ சரியேயில்ல நீ மொதல்ல கிளம்பு..

அதெல்லாம் கிளம்ப முடியாது என்ன பண்ணுவ..ம்ம் அப்போ நா போறேன் என எழுந்தவளை தன்புறம் இழுத்து முகத்தை கையில் ஏந்தியவன் முத்த மழையால் நனைத்தான்..ஜென்ம ஜென்மமாய் தன்னை பிரிந்து தவித்தவளுக்கு அவனின் இதழ் முத்தத்தில் விமோஷனம் அளித்திட நினைத்தான்..நிமிடங்கள் கரைய சுயநினைவு பெற்றவள் சட்டென அவனை நகர்த்தி விலக கார்த்திக்கிற்கே நடந்தை ஏற்க நேரமாயிற்று..

மாமா எனக்கு எதாவது ப்ராப்ளம் இருக்குநு நினைக்குறியா??நேத்து நா அப்படி நடந்துகிட்டதுக்காக டாக்டர் யாரையாவது பாத்துட்டு வரீயா??எதுவியிருந்தாலும் சொல்லு மாமா..

 ஏலூசு ஏன் என்னென்னவோ பேசுற சத்தியமா நா சிவா க்ளைண்ட்ட பாக்க தான் போனேன் ஏன் இப்படிலா யோசிக்குற??

இல்ல நீ இப்படிலா என்கிட்ட நடந்துக்க மாட்டியே அதான் என்றாள் எங்கோ பார்த்தவாறு..

அடிப்பாவி எதாவது பண்ணாதான் தப்புநு பாத்தா ஒண்ணுமே பண்ணாம இருக்குறதும் தப்பா இத நீ முன்னாடியே க்ளியரா சொல்லிருக்கனும் செல்லம் என அவள் கைப்பற்றி அருகில் வர ஷரவ் சரியாய் உள்ளே நுழைந்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.