ம்ம் நீ ரொம்ப பேட் பாய் கார்த்திக் விடு நா கீழே போறேன் இல்ல ஷரவ் என்ன ஒரு வழி பண்ணிடுவா என்றவள் சிட்டாய் பறந்துவிட சிறுநகையோடு அவளை பின் தொடர்ந்தான் கார்த்திக்..அவர்களை கண்ட சிவா தொண்டையை செருமியவாறு ம்ம் வர வர இந்த காதல் புறாக்கள் தொல்லை தாங்கமுடில..
டேய் சிவா வேணாம் அப்பறம் ஷரவ்கிட்ட எதாவது சொல்லி உன்ன கோர்த்து விட்டுருவேன்..
அம்மா தாயே ஏற்கனவே இங்க ஒரு டெவலெப்மெண்டும் இல்ல இதுல நீ வேற எதையாவது பத்த வச்சுறாத..
ம்ம் அப்படி வா வழிக்கு என உள்ளே சென்றாள்..கார்த்திக் சிவா ஷரவனோடு ஹாலில் அமர,சிவா ஷரவனிடம் என்ன மச்சான் சைக்காலஜி க்ளாஸ்லா எந்த லெவல்ல இருக்கு என நக்கலாய் கேட்க வழக்கம்போல் ஷரவன் அவனிடம் கைகூப்ப முதலில் விளையாட்டாய் சிரித்த கார்த்திக்கிற்கு சட்டென ஒரு விஷயம் மனதில் தோன்ற அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தான்..இரவு உணவை கொடுத்துவிட்டு மணி அனைவரிடமும் கண்ணுகளா நாளைக்கு பாபநாசம் போய்ட்டு வாரீகளா??இப்போ சீசன் வேற ரொம்ப நல்லாயிருக்கும்..அனைவரும் ஒப்புதலாய் தலையசைக்க சரி அப்போ சீக்கிரமா படுத்துக்கோங்க காலைல விரைசா போனாதான் கூட்டமில்லாம இருக்கும்..அண்ணா கௌரியையும் அனுப்புங்க லீவ்ல தான இருக்கா எங்களோட வரட்டும் என கார்த்திக் கூற சம்மதமாய் தலையசைத்துச் சென்றார்..
தொடரும்
{kunena_discuss:1097}