17. நீதான் என் சந்தோசம் - ராசு
எளிமையாக நிச்சயத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
பெண் வீட்டில் ஏற்பாடாகியிருந்தது.
மனுதர்மனின் தாய் மங்களமும் தமக்கை பர்வதாவும் முறுக்கிக்கொண்டு அமர்ந்திருந்தனர். பர்வதாவின் கணவன் செல்வம் ஏதோ மனுதர்மனையும் அவனது குடும்பத்தையும் தான்தான் தாங்கிப்பிடிப்பதாக ஒரு மிதப்பில் அமர்ந்திருந்தான்.
அவர்கள் மூவரும் வீட்டை ஒரு ஏளனத்துடன் சுற்றிப்பார்த்தனர்.
இதே மாதிரி இருந்துதான் மகனது திறமையால் இப்போது வளர்ந்திருக்கிறோம் என்று அவனது அன்னை நினைக்கவேயில்லை.<
...
This story is now available on Chillzee KiMo.
...
வலி பொறுக்க முடியவில்லை.
அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்.
“என்னையா பிடிக்கலைன்னு சொன்னே? என்ன பண்றேன்னு பாரு.”
அவளுக்கு மட்டும் கேட்குமாறு முணுமுணுத்தான்.
வேண்டுமென்றே மோதிரத்தை போடுவதற்கு நேரத்தைக் கடத்திவிட்டே போட்டுவிட்டான்.
அவள் பல்லைக் கடித்தாள்.