(Reading time: 14 - 27 minutes)

அவளது நெற்றியில் பொட்டு வைக்க வந்த போது அவனது கையில் அவள் கண்ணீர் பட்டு தெறித்தது.

அவன் அதிர்ச்சியுடன் அவளது முகத்தைப் பார்த்தான்.

அவளது விழிகள் வெறித்தவாறு இருந்தன.

எதையும் அவள் கவனிக்கவில்லை.

அவன் முகம் யோசனையில் ஆழ்ந்தது. முதன் முறையாக தன் விருப்பமே பெரிது என்று எண்ணி தவறு செய்துவிட்டோமோ என்று எண்ணியவனின் முகம் இறுகியது.

அதன் பிறகு நடந்த திருமண சடங்குகளில் இருவருமே அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை.

திருமண மண்டபத்தில் இருந்து மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்தனர்.

ஆரத்தி எடுத்த உடன் மணமக்கள் உள்ளே நுழைந்தனர்.

அவளை பூஜை அறைக்கு அழைத்துச் சென்று விளக்கேற்ற வைத்தனர்.

அவளது வீட்டினர் யாரும் இல்லாமல் அவளுக்கு தனியே அங்கிருந்தது பிடிக்கவேயில்லை.

...
This story is now available on Chillzee KiMo.
...

ை அங்கிருந்த நாற்காலியில் வைத்தவள் கட்டிலில் அமர்ந்திருந்த அவனருகில் வந்தாள்.

“கொஞ்சம் எழுந்திருக்கிறீங்களா?”

‘என்னடா இது? கழுத்தில் தாலி ஏறிய உடன் மனம் மாறிவிட்டாளோ? காலில் விழுவதற்காகதான் எழச்சொல்கிறாளா?’

யோசனையுடனே எழுந்தான்.

உடனே கட்டிலில் அமர்ந்துகொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.