இன்னும் பத்து நாட்களில் திருமணம் என்று முடிவானது.
திருமணத்திற்காக முகூர்த்தப் புடவையும் மாப்பிள்ளைக்கு மற்றவர்களுக்கும் உடைகள் வாங்க இரு குடும்பத்தாரும் அந்தக் கடைக்கு வந்திருந்தனர்.
யாருக்கோ எடுக்கிறார்கள் என்று விட்டேற்றியாக அமர்ந்திருந்தாள் நேசமலர்.
“அக்கா! என்னக்கா இப்படி உட்கார்ந்திருக்கே? உனக்குப் புடிச்சதை எடுக்கலாம்ல.”
வண்ணமலர் தொணதொணத்தாள்.
‘எனக்கு இந்த கல்யாணமே பிடிக்கலையாம். இதில் புடவையை மட்டும் பிடிச்ச மாதிரி எடுக்கனுமா?’
வேண்டாவெறுப்பாக போய் எடுத்தாள்.
அதற்கான செலவையுமே அம்மாதானே கொடுக்க வேண்டும் என்று மிகவும் குறைந்த விலையில் எடுத்தாள்.
“அக்கா! இதுக்கு நீ எடுக்க வராமயே இருந்திருக்கலாம்.”
“நீதானேடி தொணதொணத்தே. இப்ப எதுக்கு என்னை க
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் சில்லிட்டிருந்தன.
அவனருகில் அமரவைக்கப்பட்டாள்.
முகூர்த்த நேரத்தில் அவளது கழுத்தில் தாலி கட்டினான்.
அவளறியாமல் கண்கள் கண்ணீரை சொறிந்தன.
அவளது விருப்பம் இல்லாமலே அவள் திருமணம் முடிந்துவிட்டது. இதை நினைத்துப்பார்க்கையில் இயலாமையில் அவளுக்கு கண்ணீராக வெளிவந்தது.