(Reading time: 6 - 12 minutes)

டாக்டர், என் பையனோட என்கேஜ்மன்ட்க்கு நீங்க கண்டிப்பா வரணும். மேரேஜ் இந்தியாவில நடப்பதால் இங்க பிரெண்ட்ஸ் எல்லோருக்கும் இந்த என்கேஜ்மன்ட் பார்ட்டி அரேஞ் செய்திருக்கேன்” கணேஷ் ராமின் அட்டர்னி ஈஸ்வரமூர்த்தி அவனை அழைக்கவும் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டிருந்தான்.

அவர் சென்றதும் தான் ஏன் அவ்வாறு உடனே சம்மதம் தெரிவித்தோம் என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்.

பொதுவாக இது போன்ற விழாக்களை பெரும்பாலும் தவிர்த்து விடுவான். அவன் உற்சாகமாக பங்கெடுத்துக் கொண்ட ஒரே திருமண விழா அவனது ஆருயிர் தோழி பூர்வி என்ற பூரி மசாலாவின் திருமணம் தான்.

அந்த நாளை எண்ணி சிரித்துக் கொண்டான். உடனேயே தோழிக்கு கால் செய்தான்.

“டேய் கரம் மசாலா. என்ன இந்நேரத்தில” பாதி கொட்டாவியுடன் பூர்வி போனை எடுக்கவும் யோசியாமல் அவளுக்கு கால் செய்துவிட்டதை எண்ணி தன்னை தானே கடிந்து கொண்டான்.

“உனக்கு கால் செய்ய என்ன சுபயோக முஹுர்த்தம் எல்லாம் பார்க்கணுமா”

“அதை எல்லாம் எனக்கு கால் செய்ய பார்க்காம நீ கல்யாணம் செய்துக்க பார்க்கணும்”

“பார்க்கலாம் பார்க்கலாம்” கணேஷ் ஒரு வித லயிப்போடு சொல்லவும் மறுமுனையில் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் பூர்வி அதை கண்டுகொள்ளமால் போனாள்.

“இதையே சொல்லுங்க எல்லோரும்” அலுத்துக் கொண்டாள்.

“நான் எப்போ தான் விதவிதமா டிரஸ் போட்டு டான்ஸ் ஆடுறது, பாட்டு பாடுறது, கலாட்டா செய்றது” பெருமூச்சு விட்டாள் பூர்வி

“அதான் அந்த ஆட்டம் பாட்டம் எல்லாம் உன் என்கேஜ்மன்ட்ல ஜோரா போட்டாச்சே. அப்புறம் என்ன. அதுவும் கேம்ல ரஞ்சன் தோத்துட்டா உன்னை தூக்கணும்னு கண்டிஷன் போட்டியே. பாவம் அவர். நல்ல வேளை பாஸும் உன் அண்ணாவும் அவர் பக்கம் இருந்ததால தப்பிச்சார்”

“போடா எல்லாம் உன்னால தான். உன்னை போய் என்கூட கூட்டு சேர்த்தேன் பாரு. சரி எதுக்கு இந்நேரத்தில போன் செய்த அதை சொல்லு” பூர்வி கேட்கவும் கணேஷிற்கு என்ன சொல்வதன்று தெரியவில்லை.

“ஏதேனும் விஷயம் இருந்தா தான் உனக்கு போன் செய்யணுமா பூரி” நண்பன் கேட்கவும் உருகித் தான் போனாள்.

“நீ போன் செய்ததே எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா. இன்னிக்கு அக்காவும் அண்ணாவும் கூட போன் செய்தாங்க. இன்னிக்கு என்னவோ எல்லாமே நல்லதா நடக்குது” பூர்வி சொல்லவும் கணேஷ் ராமிற்கு ஏனோ மனதில் இனம் புரியாத மகிழ்ச்சு ஊற்றெடுத்தது.

“சரி பூரி மசாலா. குட் நைட்.. போய் தூங்கு” போனை வைத்தவன் மனம் லேசாக இருந்தது.

“முஹுர்த்தம் பாரு” பூர்வி சொன்னதை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டான். அவன் நினைவில் அவனது அர்ஷு சர்வ அலங்காரங்களோடு அவன் முன்னே நிற்பதை கற்பனை செய்து கொண்டிருந்தான்.

கற்பனையும் நனவாகுமோ.

இதயம் துடிக்கும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1109}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.