“ஏய்! எதுக்குடா?”
தம்பியை தேற்றியவாறே கேட்டான்.
“புது சொந்தத்தை உருவாக்கித் தந்ததுக்கு.”
“இன்னிக்கு என் மூலமா புது சொந்தம் உனக்கு வந்தது. நாளைக்கே உன் மூலமா புது சொந்தம் வரும். இதுக்கெல்லாம் நன்றி சொல்லிக்கிட்டு அந்நியப்படுத்தாதே.”
“என் மூலமா புதுசா ஒரு சொந்தமா?”
கேள்வியாய் நோக்கியவனின் கண்களில் வண்ணமலரின் சிரித்த முகம் தோன்றியது.
காரில் ஏறி அமர்ந்தான்.
“பத்திரமா போ!”
“சரிண்ணா. நான் போயிட்டு வண்டி கொடுத்து விடறேன்.”
அவன் கிளம்பிவிட்டான்.
மனுதர்மன் உள்ளே வந்தான்.
“என்னத்தான்? உங்க பாசமலரை வழியனுப்பி வச்சாச்சா?”
“ம். அதெல்லாம் ஆச்சு. ஆமா! உன் பாசமலர் எங்கே?”
“அறைக்குள் தூங்கப் போயாச்சு.”
“தேங்க்ஸ் கலர்.”
...
This story is now available on Chillzee KiMo.
...
ோடே எழுந்து பதில் சொல்லிட்டு விட்ட தூக்கத்தை அப்படியே தொடருவா. எப்படித்தான் முடியுதோ?”
சலித்துக்கொண்டாள்.
“உனக்கு ஏன் பொறாமையா இருக்கு?”
“ஒருநாள்தான் பகல்ல வீட்டில் இருக்கோம். அன்னிக்கும் சிரிச்சுப் பேசன்னு இல்லாம எனக்குல்ல போரடிக்கும்.”
“அதான் கொடி இருக்காளே?”