மனதார நன்றி சொன்னான்.
வண்ணமலருக்கு அவனை முதன்முதலில் கண்டு பேசியது ஞாபகம் வந்தது.
“வணக்கம்மா! நான் மனுதர்மன்.”
என்று தன் விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான்.
அதை முந்திக்கொண்டு வண்ணமலர் வாங்கி படித்துப்பார்த்தாள்.
“அது எங்களோட கம்பெனிதான்.”
பிசினஸ் சம்பந்தமான படிப்பை எடுத்துப் படிப்பதால் வண்ணமலர் அந்தக் கம்பெனியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாள். பெரிய இடம் என்று புரிந்தது.
அவனுக்கு தங்களிடம் என்ன வேலை?
யோசனையுடன் அவனைப் பார்த்தாள்.
“நான் இப்பத்தான் படிச்சுக்கிட்டு இருக்கேன் சார். நானே படிப்பு முடிஞ்சதும் உங்ககிட்ட வர்றேன். அப்ப வேலை போட்டு தாங்க. இப்ப பாதியிலேயே படிப்பை என்னால் விடமுடியாது.
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்வீங்க?”
“அவ கிடக்கிறா சின்னப் பொண்ணு. ஏதோ தெரியாம சொல்லிட்டா தம்பி. நீங்க பெரிய இடம்னு பார்த்தாலே தெரியுது. இதெல்லாம் எங்க குடும்பத்துக்கு ஒத்து வராது.”
“தயவு செய்து அப்படி சொல்லாதீங்கம்மா.”
“சரி! நாங்க ஒத்துக்கிறோம்னு வச்சுக்குங்க. உங்க வீட்டில் சம்மதிப்பாங்களா?”