“ஆமா! அவ இருந்துட்டாலும். ஒன்னு அம்மா பின்னாடி ஏதாவது வேலை செய்யறேன்னு வால் பிடிச்சுக்கிட்டு இருப்பா. இல்லைன்னா அமைதியின் சொரூபமா இருப்பா.”
“நீ பாவம்தான்.”
அவன் அவள் பேச்சை ஆமோதித்தான்.
“மலரு. நீ போய் அக்காவை கிளப்பு. கோயிலுக்குப் போகனும்.”
அவள் உள்ளே சென்றுவிட்டாள்.
“மாப்பிள்ளை! நீங்களும் தயாராகுங்க. கோயிலுக்குப் போயிட்டு வரனும்?”
“எந்த கோயிலுக்குப் போறோம் அத்தே?”
“குலதெய்வம் கோயிலுக்குதான். நீங்க ரெண்டு பேர் மட்டும் போயிட்டு வாங்க மாப்பிள்ளே.”
“முதன் முதலா போறோம். குடும்பத்தோட எல்லாரும் சேர்ந்தே போவேமே. தம்பியும் போயிட்டு காரை அனுப்பி வச்சிட்டான். எல்லாரும் கிளம்புங்க.”
“சரிங்க மாப்பிள்ளை.”
உள்ளே சென்றவள் அவனுக்கு குடிக்க டீயுடன் கார வ
...
This story is now available on Chillzee KiMo.
...
>முதன் முதலில் அவர்களை இங்கேதான் அவன் சந்தித்தான். சந்தித்து இந்த புது சொந்தத்துக்கு அடிபோட்டான்.
“சரிங்க மாப்பிள்ளே.”
உள்ளே சென்றனர்.
“உன் சன்னிதானத்தில் வச்சுதான் என் திருமணப் பேச்சை எடுத்தேன். நான் விருப்பப்பட்டவளையே எனக்கு மனைவியாக்கிவிட்டாய். நன்றி பிள்ளையாரப்பா.”