வீட்டின் பின்பக்கம் பேச்சுக்குரல் கேட்க அங்கே சென்று பார்த்தவள் கண்டிப்பாக அப்படி ஒரு காட்சியை எதிர்பார்த்திருக்கவில்லை.
பனியன் கைலியுடன் தலையில் துண்டை சுற்றியிருந்தவன் மண்வெட்டியைப் பிடித்து வெட்டி தோட்டத்தை சுத்தம் செய்யும் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளது அண்ணனோ தந்தையோ இதுவரைக்கும் இப்படி ஒரு வேலையை செய்ததில்லை.
ஜெயசுதாதான் போட்டடித்துப் பார்ப்பாள்.
அவளுக்காக மகள்களும் துணை நிற்பார்கள். அவர்களால் முடியாத வேலையை ஆள் விட்டு செய்வார்கள்.
இங்கே மாமியார் வீடு என்று துளிக்கூட கர்வம் காட்டாமல் இயல்பாய் பேசி சிரித்துக்கொண்டு வேலை பார்ப்பவன் அவளை ஆச்சர்யப்படுத்தினான்.
ஜெயசுதாவுக்கும் முதலில் தர்மசங்கடமாய்தான் இருந்தது.
“அத்தை! எனக்கு தோட்ட வேலை பார்க்கனும்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
்திடுவோம்.”
“அதெல்லாம் வேண்டாம் மாப்பிள்ளே?”
“இருக்கட்டும் அத்தே. எல்லாத்தையும் சாப்பிடப் பழகிக்கனும்தானே? நீங்க இன்னிக்கு அலட்டிக்க வேண்டாம். என் பொண்டாட்டி கையால் சமைக்கிறதை நான் இன்னிக்கே சாப்பிடப் பழகிடுறேன்.”
ஜெயசுதா மகளை பார்வையாலேயே விரட்ட அவள் விரைந்துவிட்டாள்.