“உனக்கு என்ன பதில் வேணும்? நான் சாப்பிட்டேனா இல்லையான்னா? அதை தெரிஞ்சுக்கிட்டு என்ன செய்யப்போறே? உனக்கு நடக்க வேண்டியது நல்லா நடக்குதுல்ல. அத்தோட விடு. நானே அலுத்துக் களைச்சுப்போய் எப்படா சாயலாம்னு வந்திருக்கேன். அது கூட உனக்குப் பொறுக்கலையா? உனக்கு என்னைப் பிடிக்கலைன்னா என் வீட்டில் கொண்டு போய் விட்டுடு.”
“நீ இந்த அளவுக்கு கோபப்படற மாதிரி அப்படி என்ன நான் உனக்கு துரோகம் பண்ணிட்டேன்?”
அவளுக்கு தான் கஷ்டப்படுவது எல்லாம் கண் முன்னே வந்தது. எல்லாம் அவனால்தான் என்ற எண்ணமும் கூடவே வந்தது.
அவள் அவனது காதல் மனைவியாக வாழ்ந்திருந்தால் அந்த வேலைச்சுமை பெரிதாக தெரிந்திருக்காது.
“நீதான் காரணம். இப்ப நான் கஷ்டப்படறதுக்கு நீதான் காரணம்.”
கோபமுடன் சொல்லிக்கொண்டே தலையணையை தூக்கி அவன் மேல் எறி
...
This story is now available on Chillzee KiMo.
...
ாம் அதிகமாய் செய்ததில் அவள் உடல் அலுத்துக் களைத்து அதிலேயே அவளுக்கு காய்ச்சல் வந்துவிட்டது.
அவளை தலையணையில் படுக்க வைத்தவன் தண்ணீரைக் கொதிக்க வைத்து எடுத்து வந்து காய்ச்சலுக்கான மாத்திரையை அவளுக்கு கொடுத்தான்.
மீண்டும் கட்டிலில் அமர்ந்து அவளை தன் கை அணைப்பிலேயே வைத்திருந்தான்.