அவனது அணைப்பில் இருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் அவள் தூங்கிக்கொண்டிருந்தாள்.
வண்ணமலர் சொன்னது சரிதான்.
“மாமா! அவள் வளர்ந்த குழந்தை. தன் பிரச்சினையை வெளியாள்கிட்ட காண்பிக்க மாட்டா. அம்மா என்னைக்காவது வீட்டில் இல்லேன்னா சமைப்பா. ஆனால் சாப்பிட மாட்டா. அம்மா வந்து பிசைந்து உருட்டிக்கொடுத்தா நல்லா சப்புக்கொட்டிக்கிட்டு சாப்பிடுவா. அம்மா ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்துட்டாங்க.”
காலையில் அவள் எழத் தாமதமானது.
“மலர்! எங்கே எழுந்திருக்கிறே? உனக்கு உடம்பு சரியில்லை. படு.”
அவள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. கிளம்பினாள்.
அவள் தோளைப் பிடித்து அழுத்தி அவளை மீண்டும் கட்டிலில் அமர்த்தினான்.
“நான்தான் சொல்லிக்கிட்டேயிருக்கேன்ல. நீ கிளம்ப வேண்டாம்.”
அவள் படுத்துவிட்டாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சல்.”
“அப்படின்னா நீங்க ஹாஸ்பிட்டலுக்கில்லே அழைச்சுட்டுப் போயிருக்கனும்.”
வண்ணமலர் கேட்டாள்.
“நானும் அங்கேதான் கிளம்பினேன். பிளகு உங்களை பிரிஞ்ச ஏக்கத்தில்தான் காய்ச்சல் வந்துவிட்டதோன்னு நினைச்சு இங்கே அழைச்சுட்டு வந்தட்டேன்.”
ஜெயசுதா மகளை தொட்டுப்பார்த்தாள்.