“சொல்லுங்கப்பா… அவரை நீங்க வெறுக்க காரணம் தான் என்ன?... ஏன் அவர்மேல இப்படி ஓரு குரோதம் உங்களுக்கு?...”
அதுநேரம் வரை அமைதியாக இருந்த சதி தட்சேஷ்வரைப் பார்த்து கேட்டிட, அவர் தன் மகள் மேல் அழுத்தமான பார்வை ஒன்றை செலுத்தினார்…
“…………………….”
“பேசுங்கப்பா… இந்த அளவு நீங்க அழுத்தமா அவன் மேல விரோதம் வளர்த்துக்க அவன் என்ன கொலையா செஞ்சான்?....”
இஷான் சற்றே ஆதங்கத்துடன் கேட்டிட,
“ஆமா இஷான்… அவன் கொலை தான் செஞ்சான்….”
அனைவரின் விழிகளும் விரிந்திட,
“என்னப்பா சொல்லுறீங்க?... யாரை கொலை செஞ்சான் அவன்?... அவன் ஒரு போலீஸ்காரன்ப்பா… அவன் வேலையில பண்ணத வச்சி எதுவும் சொல்லாதீங்கப்பா… அப்படி பார்த்தா நானும் கொலைகாரன் தான்…” என்றான் இஷான் வேகமாக…
“அவன் கொன்னது என் காத்தியாயினியைடா….. என் காத்தியாயினி.!!!!!!!!!!!!!!!!!...............”
அனைவரும் அவர் சொன்ன பெயரில் ஸ்தம்பித்து நின்றிட, சதியின் விழிகளோ பிரம்மரிஷியின் மேல் வந்து நின்றது சற்றே உறைந்து போனவளாய்…
அவரின் விழிகளோ மெல்ல அந்த நாளின் நினைவில் இறுக மூடிக்கொள்ள, சதியின் முகமோ அதிர்ச்சியில் உறைந்து நின்றது அக்கணமே…
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்…
எப்படி இருக்கு இந்த வீக் அப்டேட்?...
படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்…
மீண்டும் அடுத்த வார மருவக் காதல் கொண்டேனில் சந்திக்கலாம்…
தொடரும்...!
{kunena_discuss:1001}