சேதுராம் வீட்டில் பணக்காரர்கள் என்றாலும் ஒழுக்கத்தை போற்றுபவர்கள். அதனால் சேதுராம் சார் வீட்டில் சொல்ல பயம். அழித்து விடலாம் என்று மருத்துவமனை சென்றால் காலம் கடந்து விட்டது என்று சொல்லி இருக்கிறார்கள்.
நம்ம மாமா மாணிக்க வாசகம் இருக்கிறாரே அவருடன் ஒன்றாக படித்தது தான் இந்த சேது ராம் சார். சேதுராம் மாமாவிடம் புலம்பி இருப்பார்கள் போல. மாமாவுக்கும் விசயம் தெரியுமாம்.அப்போது எப்பவாவதுஅவர்கள் காதலுக்கு தூது போகும் போது தான் மாமா அத்தையை பார்த்திருக்கிறார். அமைதியெ வடிவாக இருந்த அத்தையை அவருக்கு பிடித்து விட்டது. நம்ம ராஜூ தாத்தாவிடம் அனுமதியும் வாங்கி விட்டார். ஆனால் படித்து முடிக்கட்டும் என்று காத்திருந்தார்.
சிறுவயதிலேயே அத்தையுடைய அப்பா இறந்ததால் அம்மா மட்டும் தான். அந்த பாட்டியையும் இங்கு வர விடாத மாதிரி பார்த்து கொண்டது அத்தை தான். ஏன் என்றால் அத்தைக்கு ஒரு நாள் தெரிந்து விட்டது. விமலா ஆன்டீ மாசமா இருக்கிறதை பார்த்து அதிர்ந்து போய்டாங்களாம். அப்புறம் ஊருக்கு பயந்து அவரும் உண்மையை ஒருவாறாக ஜீரனித்து கொண்டார்.
அத்தை தான் ஏதாவது பொய் காரணம் சொல்லி அவங்க அம்மாவை இங்கு வர விடாமல் செய்தது. ஒரு வழியாக மணி அங்கிள்க்கு விசயம் தெரிஞ்சு அவர் சேதுராம் சாரை அடிக்க போக அவருடைய பணத்துக்கு அவரும் அடிமையாகி சரி எப்படியும் குழந்தை பிறந்த பிறகு கல்யாணம் செய்து கொள்வார் தானே என்று அமைதியாகி விட்டார்.
அத்தை தான் விமலா ஆன்டீயை நன்றாக பார்த்து கொண்டது. ஒரு வழியாக நீங்களும் பிறந்தீங்க. ஆனால் உங்களுக்கு தாய் பால் கூட குடுக்க மறுத்து விட்டார்களாம் அழகு போய் விடுமாம். பிறந்தததில் இருந்தே அத்தை தான் வளர்த்தது. அப்போது ஒரு ஞாயிறு அன்று சேதுராம் அப்புறம் நம்ம மாமா இருவரும் அத்தை தங்கி இருந்த வீட்டுக்கு உங்களை பார்க்க வந்திருக்கிறார்கள். அப்போது அத்தையுடைய கெட்ட நேரம் அவாகள் அம்மாவும் அங்கு வந்திருக்கிறார்கள்.அப்போது விமலா அத்தை பயந்து போய் அத்தைதான் கல்யாணம் ஆகாமலே குழந்தை பெற்றதுனு சொல்லி இருக்காங்க. அதுக்கு இந்த மணி சாரும் உடந்தை.
அந்த பாட்டி ரெண்டு பிள்ளைங்க பேச்சை நம்பி நீயெல்லாம் ஒரு பொண்ணா னு அடிச்சு விரட்டி இருக்காங்க.எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்த மாமா அத்தை கிட்ட போய் என் கூட வந்துரு இவங்க கிட்ட இருந்து அடி வாங்க வேண்டாம் பெத்த அம்மாவே உன்னை நம்பலை. எல்லா உண்மையும் எனக்கு தெரியும். நான் உன்னை சந்தோசமாக பார்த்து கொள்கிறேன்னு சொல்லி இருக்காங்க.
அத்தை சரி என்று சொல்லி உங்களை தூக்கி கொண்டு கிளம்பும் போது கூட விமலா ஆன்டீ உங்களை கேக்கவே இல்லையாம். அவங்க கல்யாணத்துக்கு தடையா இருந்த உங்களை அத்தை கொண்டு போறதும் அவங்களுக்கு சாதகம் தானே.
ஆனா அத்தை கிளம்பும் போது மட்டும் அவங்க அம்மாவை பார்த்து இது வரைக்கும் நீ என்னை நம்புனதே இல்லை மா. இவங்க ரெண்டு பேரு செஞ்ச தப்புக்கு எல்லாம் நான் தான் அடி வாங்கி இருக்கேன். கடைசியில் இத்தனை பெரிய பொய்யையும் நம்பி என்னை சந்தேக பட்டுட்டல்ல. மூணு பிள்ளை பெத்தவ தானே பிள்ளை பெத்த உடம்புக்கு உனக்கு வித்தியாசம் தெரியாதா. அவர்கள் சொல்றதை அப்படியே நம்பிக்கோ. இனி நீ எனக்கு அம்மாவும் இல்லை நான் உனக்கு மகளும் இல்லை நீ செத்தால் கூட நான் வர மாட்டேன் என்று சொல்லி விட்டு வந்துட்டாங்க.
அப்றம் ராஜூ தாத்தா அவங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்சு இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. உங்களை பெத்த மகனா வளர்தாங்க அடுத்து அத்தைக்கு பிறந்த குழந்தை இறந்தே பிறந்து விட்டது போல. அப்றம் நீங்க தான் அவங்களுக்கு உலகம். வேறு குழந்தையும் அடுத்து வேண்டாம்ணு முடிவு பண்ணிவிட்டாங்களாம்.இந்த ஜென்மத்தில் இவன் தான் நம்ம பையன் அதுக்கு தான் பிறந்த குழந்தை கூட இறந்துது. ஒரு வேலை வேற குழந்தை வந்தா உங்க மேல உள்ள அன்பு குறைந்து விடுமோனு அப்படியே உங்களை மட்டும் ஏத்துகிட்டாங்க.
எங்க அம்மா அப்போது வேற ஊரில் படித்து கொண்டிருந்ததினால் எங்க அம்மா க்கு தெரியாது. அப்பாவுக்கும் தெரியாது. எல்லாருமே உங்களை அவங்க பிள்ளையாக தான் நினைத்திருக்காங்க.
இப்போ ரெண்டு வருசம் முன்னாடி உங்களை இந்த விமலா ஆன்டீ ஆள் வச்சு தேடுறது ராஜூ தாத்தாக்கு விசயம் தெரிந்து உங்களை பிரிச்சு கூட்டிட்டு போய் விடுவாங்காளோ என்று நினைத்து நானாவது உங்க கூட இருந்தா உறவு கொஞ்சம் பலப்படும் என்று நினைத்து நமக்கு அவசர திருமணம் செய்து வைத்தார்கள்.
ஆனால் கடைசியா ரெண்டு நாள் முன்னாடி இந்த விமலா ஆன்டீ வந்து எனக்கு குழந்தையே பிறக்கலை. என் பையனை எனக்கு குடுத்து விடு அத்தனை சொத்துக்கு அவன் தான் வாரிசு அவனை தராவிட்டால் செத்து விடுவேன் என்று மிரட்டி சம்மதிக்க வைத்திருக்கிறார்கள்.
அது மட்டும் இல்லை அவனுக்கு இந்த சாதாரண வாழ்க்கை வேண்டாம் பணக்காரனா இருக்கட்டும். முதலில் அவன் வர மாட்டேனு சொன்னாலும் இத்தனை சொத்தை விட்டு எப்படி வருவானு சொல்லி இருக்காங்க. நீயே அனுப்பிவிடு இல்லை நாங்களே உண்மையை சொல்லி கூட்டிட்டு போய்ருவோம்னு சொல்லி இருக்காங்க.