சீரான வேகத்தில் கண்மணியின் கார் அந்த சாலையில் போய் கொண்டிருந்தது. வெற்றியிடம் பேசிக் கொண்டே அவன் சொன்ன இட்த்திற்கு காரை செலுத்தினாள் கண்மணி. சுதர்சனாவைப் பற்றிபேசிக் கொண்டிருந்தான் வெற்றி.
“ஆனா வெற்றி, சுதர்சனா உயிரோட இல்லைனு அவளோட அப்பா அம்மாவே ஏன் பொய்யான விஷயத்தை சொன்னாங்க?”. சுதர்சனாவோடு பேசும்போது வெற்றிக்கு வந்த அதே சந்தேகத்தை இப்போது கண்மணி அவனைப் பார்த்துக் கேட்டாள். ஒரு பெருமூச்சுடன் நிகழ்ந்தவைகளை கூறினான் வெற்றி.
“கண்ணு எந்த ஒரு பொண்ணுக்குமே நடக்க கூடாத ஒன்னு இதுன்னு நாம வேண்டிக்கிட்டாலும் சுதர்சனா மாதிரி பல பேரு இன்னமும் பலயாகி கிட்டு தான் இருக்காங்க.. அதுவும், சுதர்சனா நேர்மையாவும் தைரியமாகவும் இருந்த்துக்கு அவளுக்கு கிடைச்ச தண்டனை இது! அவ அன்னைக்கு நடந்த்தை சொன்னைப்போ நான் நொறுங்கி போயிட்டேன்..”
“..”
“அவளை சீர்குலைய வெச்ச அந்த பொறுக்கி ஒரு அரசியல்வாதியுடைய வாரிசு! அத்தனை கொடுமைக்கு அப்பறமும் சுதர்சனா உயிர் தப்பி இருக்கானு தெரிஞ்சதும், அவளை கொல்லுறதுக்காக ஆள் அனுப்பி இருக்காங்க..”
“வாட் ?”
“ ஆமா.. சுதர்சனா தைரியமான பொண்ணு.. அவ பிழைச்சா இவன் மாட்டிப்பானே! அதுவும் இல்லாம சுதர்சனாவேகேட்டா, நிச்சயம் அவளுக்கு சப்போர்ட்டா பல ப்ரண்ட்ஸ்பேசுவாங்க.. எப்படி பார்த்தாலும் அவனுக்கு அது ரிஸ்கு”
“ஆனா ஒரு அரசியல்வாதிக்கு குற்றத்துல இருந்து தப்புறது கஷ்டம் இல்லையே?”
“அப்போ அது தேர்தல்டைம் கண்ணு!”
“..”
“கூலிப்படை வெச்சு அவளை கொல்ல பார்த்து இருக்காங்க..அதில் இருந்து தப்பிக்கத்தான் தன் மகள் செத்துட்ட்தா அவளோட அப்பா அம்மாவே வாக்குமூலம் தந்து இருக்காங்க..
“இப்போ அவங்க எங்க இருக்காங்க ?”
“ அவங்களதேடித்தான் நாம இப்போபோயிட்டு இருக்கோம்!”என்றான் வெற்றி. கண்மணி மௌனமாய் யோசிக்க ஆரம்பித்தாள்.
“ ஆனா..எனக்கு ஒன்னு புரியல டா.. நாம ஏன் இப்போ அவங்களை தேடி போறோம்? உனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”
“நான் இதைதான் படமாக்க போறேன்! ஐ மீன்,சுதர்சனாவுக்கு நடந்த்தை தான் நான் படமாக்கப்போறேன்!” என்றான் வெற்றி. சட்டென காரை நிறுத்தி இருந்தாள் கண்மணி.
“வாட்????” என அதிர்ச்சியாய் கேட்டாள் அவள். வெற்றியின் முடிவிற்கு அவள் சம்மதம் சொல்வாளா?
-வீணை இசைந்திடும்-
{kunena_discuss:1055}